• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டின் இன்றைய நிலைமைக்கு அரசியல் தோல்வியே காரணம்- வேலு குமார்

நாட்டின் இன்றைய நிலைமைக்கு அரசியல் தோல்வியே காரணம்- வேலு குமார்

shagan by shagan
2022/05/24
in இலங்கை
73 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் இன்றைய நிலைமைக்கு, கட்சியை முன்னிலைப்படுத்திய அரசியலின் தோல்வியே காரணமாகும்   என கண்டி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “எமது நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து முன்னெடுக்கப்பட்ட அரசியல் செயற்பாடுகளின் தோல்வி இன்று முழுமொத்தமாக வெளிப்படுகின்றது. இலங்கையின் அரசியலில் பெரும்பான்மை சார்ந்த தேசிய கட்சிகள் பிரதான இடம் வகித்து வந்துள்ளது. அதே போன்று, இனங்கள் சார்ந்ததாகவும், பிராந்தியங்கள் சார்ந்ததாகவும், சிறுபாண்மை கட்சிகள் உருவாகி இருக்கின்றன. அதற்கு மேலதிகமாக பல சிறு கட்சிகளின் செயற்பாடுகளும் இருக்கின்றது. இன்றைய நாட்டின் நிலைமைக்கு, கட்சியை முன்னிலைப்படுத்திய அரசியலின் தோல்வியே காரணமாகும்.

நாட்டிற்கென தேசிய கொள்கை திட்டம் ஒன்றை வகுத்து, அதற்கமைய தூர நோக்குடன் எச்செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. நாட்டிற்கென தேசிய கொள்கை ஒன்று இருக்கின்றதா? என கேட்டால், இல்லை என்பதே உண்மையாகும்.

மாறாக அரசியல் கட்சிகள் தமக்கென கொள்கைகளை வகுத்துக்கொண்டு, அவற்றையே முன்னிலைப்படுத்தி செயற்பட்டனர். காலத்திற்கு காலம் ஆட்சி மாற்றம் இடம்பெறுகின்றபோது, கொள்கையும், செயற்பாடுகளும் மாற்றமடைந்தது.

அது மட்டுமல்லாது, ஆட்சியமைப்பதற்காக கூட்டுசேரும் கட்சிகளின் நிபந்தனைகளுக்கு ஏற்பவும், விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவும், கொள்கைகள், செயற்பாடுகள் மாற்றம் அடைந்தன. இவையனைத்தும் எமது நாட்டுக்கென நிலையான ஒரு கொள்கை வேலை திட்டம் இருக்கவில்லை என்பதையே மீண்டும் காட்டுகின்றது.

கட்சிகளை பிரதிநித்துவப்படுத்தி தெரிவாகும் உறுப்பினர்களுக்கு, நாட்டையும் மக்களையும் முன்னிலைப்படுத்தி செயற்படுவதற்குரிய இடமளிக்கப்படவில்லை. மாறாக கட்சி கொள்கைக்கு கட்டுப்பட்டு, கட்சி முன்னெடுக்கும் செயற்பாட்டை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டிய நிலைக்கே தள்ளப்பட்டனர்.

அதனையும் தாண்டி சிலர் தமது சுயநல தேவைகளை மையப்படுத்தியே செயற்பட்டனர். இன்று நாடு மீள முடியாத பிரச்சினைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. இவ்வாறான சூழலிலும், கட்சி அரசியலை முன்னிலைப்படுத்துவதே பிரதானமாக நடைபெறுகின்றது.

கட்சி தலைவர்களிடையில் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வது, தமது கட்சியின் பெரும்பானமையை தக்கவைத்துக்கொள்வது என இந்நிலைமை தொடருகின்றது. இந்நிலைமை மாறி, மக்கள் பிரதிநிதிகள் மக்களையும், நாட்டையும் முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டிய காலகட்டம் உருவாகி இருக்கின்றது. கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று செயற்பட்டாலே இன்று நாம் விழுந்திருக்கும் அதலபாதாளத்திலிருந்து மீள எழமுடியும்.”என தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை – காஞ்சன விஜேசேகர

Next Post

ஆப்கானிலிருந்து பிரித்தானியா வெளியேறியது பேரழிவு- துரோகம்!

Related Posts

இலங்கை

பேராதனை கருப்பு பாலம், களுகமுவ பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு!

2025-12-18
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடையும் – அரசாங்கம் நம்பிக்கை!
ஆசிரியர் தெரிவு

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடையும் – அரசாங்கம் நம்பிக்கை!

2025-12-18
இந்திய உயர்ஸ்தானிகர் – ஜீவன் தொண்டமான் சந்திப்பு!
இலங்கை

இந்திய உயர்ஸ்தானிகர் – ஜீவன் தொண்டமான் சந்திப்பு!

2025-12-18
அதிகபட்ச நீர் மட்டத்தை எட்டியுள்ள பல நீர்த்தேக்கங்கள் – மக்கள் எச்சரிக்கை!
இலங்கை

அதிகபட்ச நீர் மட்டத்தை எட்டியுள்ள பல நீர்த்தேக்கங்கள் – மக்கள் எச்சரிக்கை!

2025-12-18
நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை 2026 பெப்ரவரியில்!
இலங்கை

நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை 2026 பெப்ரவரியில்!

2025-12-18
ரூ.500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
இலங்கை

ரூ.500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

2025-12-18
Next Post
ஆப்கானிலிருந்து பிரித்தானியா வெளியேறியது பேரழிவு- துரோகம்!

ஆப்கானிலிருந்து பிரித்தானியா வெளியேறியது பேரழிவு- துரோகம்!

பத்திரிகை கண்ணோட்டம் 24 05  2022

பத்திரிகை கண்ணோட்டம் 24 05 2022

ஏப்ரல் மாதத்தில் அரசாங்கம் கடன் வாங்குவது குறைந்துள்ளது!

ஏப்ரல் மாதத்தில் அரசாங்கம் கடன் வாங்குவது குறைந்துள்ளது!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

2025-11-01
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2

பேராதனை கருப்பு பாலம், களுகமுவ பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு!

0
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடையும் – அரசாங்கம் நம்பிக்கை!

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடையும் – அரசாங்கம் நம்பிக்கை!

0
சிறுவர்களிடம் பெண் வெறுப்பின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய இங்கிலாந்து ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி!

சிறுவர்களிடம் பெண் வெறுப்பின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய இங்கிலாந்து ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி!

0

பேராதனை கருப்பு பாலம், களுகமுவ பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு!

2025-12-18
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடையும் – அரசாங்கம் நம்பிக்கை!

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடையும் – அரசாங்கம் நம்பிக்கை!

2025-12-18
சிறுவர்களிடம் பெண் வெறுப்பின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய இங்கிலாந்து ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி!

சிறுவர்களிடம் பெண் வெறுப்பின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய இங்கிலாந்து ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி!

2025-12-18
மின்சார போர்வைகளை திரும்பப் பெறும் உத்தரவு இங்கிலாந்தில் பிறப்பிப்பு!

மின்சார போர்வைகளை திரும்பப் பெறும் உத்தரவு இங்கிலாந்தில் பிறப்பிப்பு!

2025-12-18
இங்கிலாந்து, வேல்ஸில் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் திருட்டு – புதிய ஆய்வில் தகவல்!

இங்கிலாந்து, வேல்ஸில் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் திருட்டு – புதிய ஆய்வில் தகவல்!

2025-12-18

Recent News

பேராதனை கருப்பு பாலம், களுகமுவ பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு!

2025-12-18
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடையும் – அரசாங்கம் நம்பிக்கை!

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடையும் – அரசாங்கம் நம்பிக்கை!

2025-12-18
சிறுவர்களிடம் பெண் வெறுப்பின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய இங்கிலாந்து ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி!

சிறுவர்களிடம் பெண் வெறுப்பின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய இங்கிலாந்து ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி!

2025-12-18
மின்சார போர்வைகளை திரும்பப் பெறும் உத்தரவு இங்கிலாந்தில் பிறப்பிப்பு!

மின்சார போர்வைகளை திரும்பப் பெறும் உத்தரவு இங்கிலாந்தில் பிறப்பிப்பு!

2025-12-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.