பதுளை மாவட்டத்தின் பசறை பகுதியில் அமைந்துள்ள, பசறை தமிழ் தேசிய பாடசாலை, சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பாடசாலையின் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க மனிதாபிமான நேசக்கர சமூக சேவை அமைப்பு இன்று (25) செயற்பட்டது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தலைமையிலான குழுவினர் பாடசாலைக்கு விஜயம் செய்து, புனரமைப்பு நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டனர்.
சுமார் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான திட்டமாக இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. புயலால் சேதமடைந்த பாடசாலை மண்டபங்கள் மற்றும் கட்டிடங்களை சீரமைக்கும் பணிகளில் குழுவினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.
மேலும், இந்த மனிதாபிமான முயற்சியின் ஒரு பகுதியாக எதிர்வரும் திங்கட்கிழமை சுமார் 200 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த சேவைக்காக பாடசாலை அதிபர் கே. எம். சி. பிரபாகரன், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.













