அதிக அபாயம் உள்ள பகுதிகளில் டெங்கு ஒழிப்பதற்கான விசேட திட்டம் இன்று (06) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசக நிபுணரான வைத்தியர் பிரஷில சமரவீரவின் கூற்றுப்படி,
43 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதிக அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆறு மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு இதுவரை 26,071 டெங்கு நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் 13 இறப்புகளும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
நுளம்புகளின் இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்க சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமறிக்கவும்.
மேலும், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த சமூக விழிப்புணர்வு இன்றியமையாதது என்றும் அவர் வலியுறுத்தினார்.














