• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

சரத் வீரசேகர நாட்டு மக்களைய தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் – வீ.கே.சிவஞானம்

shagan by shagan
2022/06/25
in இலங்கை, பிரதான செய்திகள்
71 1
A A
0
சரத் வீரசேகர நாட்டு மக்களைய தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் – வீ.கே.சிவஞானம்
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சரத் வீரசேகரவின் கூற்று  நாடாளுமன்றத்தையும் நாட்டு மக்களையும் தவறாக வழிநடாத்தும் உண்மைக்கு புறம்பான ஒன்றாகும் என வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ”கடந்த 21.06.2022 ஆம் திகதி  நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, “அண்மையில் யாழ்ப்பாணம் நாகவிகாரையில் புத்த பெருமான் சிலையை நிறுவதற்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.” என்று கூறியதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

யாழ்ப்பாண நகரத்தின் சிரேஷ்ட குடியிருப்பாளர் என்ற வகையில் மட்டுமன்றி இந்த நகரத்தின் நிர்வாகத்திலும் விவகாரங்களிலும் கடந்த 60 வருடங்களாக

தொடர்புடையவன் என்ற வகையில் இந்தக் கூற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன். இப்படி எந்த நிகழ்வும் நாகவிகாரையில் நடந்ததாக எவருக்கும் தெரியாது.

இவரின் கூற்று நாடாளுமன்றத்தையும் நாட்டு மக்களையும் தவறாக வழிநடாத்தும் உண்மைக்கு புறம்பான ஒன்றாகும்.

இவரும் இவரைப் போன்றவர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பல தசாப்தங்களாக நாக விகாரையுடனும் அதன் விகாராதியுடனும் மிகவும் மேம்பட்ட புரிந்துணர்வையும் அன்னியோன்மத்தையும் யாழ்ப்பாண மக்கள் பேணி வந்துள்ளனர்.

நாகவிகாரையின் உள்விவகாரங்களில் எவருமே தலையிட்டதும் கிடையாது. அப்படி இருக்கையில் நாகவிகாரையில் புத்த பெருமானின் சிலையை நிறுவதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டார்கள். அப்படியானவர் யாரும் இங்கு இல்லை.

மேலும் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இந்தியாவின் தமிழ்நாட்டிலும் இலங்கையின் வடபகுதியிலும் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த வரலாறு பற்றி பல அறிஞர்கள் எழுதியுள்ளனர். இங்குள்ள பௌத்த எச்சங்கள் யாவும் தமிழ் பௌத்த எச்சங்களே தவிர சிங்கள பௌத்த எச்சங்கள் அல்ல.

தென்னிலங்கையின் பௌத்த மத உள்வருகையில் யாழ்ப்பாண தமிழ் மக்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அவர்களின் ஆதரவு இல்லாமல் சங்கமித்தவும் அறஹத் மஹிந்த மாதகல் ஊடாக அனுநாதபுரம் சென்று வெள்ளரசு மரத்தை நாட்டி புத்த சமயத்தை பரப்பியிருக்க முடி யாது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

கால ஓட்டத்தில் சிதைவுற்ற பல சைவ ஆலயங்களின் எச்சங்களை பௌத்த மத எச்சங்கள் என்று புனைந்து பௌத்த விகாரைகளை அமைக்கவும், அந்தந்தப் பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்த சைவத் தமிழ் மக்களின் நிலங்களை மதத்தின் பெயரால் அபகரிப்பதும் அடாத்தான செயல்கள். இவற்றை தமிழ் மக்கள் எதிர்த்து குரல் எழுப்பி போராடியே தீருவர் – இவற்றை அச்சுறுத்தல்கள் மூலம் அடக்கி விடலாம் என்பது பகற் கனவு.

தமிழர்கள் கடந்த எழுபது வருட காலத்தில் கே.எம்.பி.ராஜரட்ண, தேமிஸ், என்.கியூ.டயஸ், ஜெயசூரிய, சிறில் மத்திய போன்ற பல இனவாதிகளைக் கண்டவர்கள்.  இப்பொழுதும் சரத் வீரசேகர, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்ற சிங்கள பௌத்த பேரினவாதிகளையும் அதே நிலைப்பாட்டியே உள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவையும் காண்பவர்கள்.

இவர்களுக்கு எவ்வாறு அவர்களது சிங்கள பௌத்த அடையாளம் உணர்வுபூர்வ மானதோ அதேபோல் தமிழ் இந்துக்களுக்கு அவர்களது அடையாளம் உணர்வுபூர்வ மானது. இனத்துவ மற்றும் சமய அடையாளங்களைப் பேணிக் காக்கவே நாம் போராடுகின்றோம் என்பதை சிங்கள பேரினவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். எமது போராட்டம் சிங்கள மக்களுக்கோ புத்த மதத்திற்கோ எதிரானது அல்ல – என்றுள்ளது

Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!
இலங்கை

எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு புதிய விலை இதோ

2022-08-08
மீண்டும் தீவிரமடையும் டெங்கு ஜனவரியில் மாத்திரம் 7702 நோயாளர் பதிவு!
இலங்கை

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – சுகாதார திணைக்களம் எச்சரிக்கை!

2022-08-08
இலங்கையை சுபீட்சமான நாடாக மாற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கு திறமை உள்ளது – எகிப்து ஜனாதிபதி
இலங்கை

இலங்கையை சுபீட்சமான நாடாக மாற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கு திறமை உள்ளது – எகிப்து ஜனாதிபதி

2022-08-08
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!
இலங்கை

நாளைய போராட்டத்திற்கு தடை கோரிய பொலிஸார்: கொடுக்க மறுத்து நீதிமன்றம் உத்தரவு

2022-08-08
சர்வக்கட்சி அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை- சுனில் ஹந்துன்னெத்தி
இலங்கை

சர்வக்கட்சி அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை- சுனில் ஹந்துன்னெத்தி

2022-08-08
யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!
இலங்கை

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

2022-08-08
Next Post
கருக்கலைப்பு உரிமை: 50 ஆண்டுகால உத்தரவை மாற்றி அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு

கருக்கலைப்பு உரிமை: 50 ஆண்டுகால உத்தரவை மாற்றி அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

அனைத்து மதுபானக் கடைகளும் மூடல் !

2022-07-09
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
எரிபொருள் இறக்குமதிக்கு வேறு சந்தையை பரிசீலிக்கும் இந்தியா!

டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்ய முடியும் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

2022-07-08
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

2022-07-11
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு புதிய விலை இதோ

2022-08-08
மீண்டும் தீவிரமடையும் டெங்கு ஜனவரியில் மாத்திரம் 7702 நோயாளர் பதிவு!

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – சுகாதார திணைக்களம் எச்சரிக்கை!

2022-08-08
இலங்கையை சுபீட்சமான நாடாக மாற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கு திறமை உள்ளது – எகிப்து ஜனாதிபதி

இலங்கையை சுபீட்சமான நாடாக மாற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கு திறமை உள்ளது – எகிப்து ஜனாதிபதி

2022-08-08
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

நாளைய போராட்டத்திற்கு தடை கோரிய பொலிஸார்: கொடுக்க மறுத்து நீதிமன்றம் உத்தரவு

2022-08-08
சர்வக்கட்சி அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை- சுனில் ஹந்துன்னெத்தி

சர்வக்கட்சி அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை- சுனில் ஹந்துன்னெத்தி

2022-08-08

Recent News

கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு புதிய விலை இதோ

2022-08-08
மீண்டும் தீவிரமடையும் டெங்கு ஜனவரியில் மாத்திரம் 7702 நோயாளர் பதிவு!

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – சுகாதார திணைக்களம் எச்சரிக்கை!

2022-08-08
இலங்கையை சுபீட்சமான நாடாக மாற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கு திறமை உள்ளது – எகிப்து ஜனாதிபதி

இலங்கையை சுபீட்சமான நாடாக மாற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கு திறமை உள்ளது – எகிப்து ஜனாதிபதி

2022-08-08
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

நாளைய போராட்டத்திற்கு தடை கோரிய பொலிஸார்: கொடுக்க மறுத்து நீதிமன்றம் உத்தரவு

2022-08-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.