யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இருந்து 18 கடல் மைல் தொலைவில் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற கப்பலை யாழ். மீனவர்கள் நேற்று சுற்றிவளைத்துள்ளனர்.
மீனவர்கள் கப்பலைப் பற்றி உடனடியாக கடற்படைக்கு தகவல் கொடுத்ததையடுத்து அந்த இடத்திற்கு மூன்று படகுகளை அனுப்பி வைத்தனர்.
விபத்துக்குள்ளான குறித்த படகில் இருந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் மியன்மார் நாட்டை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.