• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மஹிந்த, கோட்டாவுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் – தயாசிறி!

1.019 Views
3 years ago
71 0
0
Share
Facebook Twitter WhatsApp
    யே.பெனிற்லஸ் யே.பெனிற்லஸ்
    0 Subscriber

    ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பை முன்னுதாரணமாக எடுத்து, யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்றில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    இதன்போது உரையாற்றிய அவர், “உயர் அதிகாரியொருவர் அவருக்குக் கீழ் வேலை செய்யும் அதிகாரிகள் இழைக்கும் குற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற சட்டம் உலகலாவிய ரீதியாக நடைமுறையில் உள்ளது.

    இந்த கால்டோனா சட்டமானது, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக இலங்கையிலும் இன்று அமுலுக்கு வந்துள்ளது.

    இந்த சட்டமானது இலங்கையில் அமுலுக்கு வருவது இதுதான் முதன்முறையாகும். இவ்வாறான சட்டத்தினால், சரத்பொன்சேகா கூட எதிர்க்காலத்தில் தண்டனைக்கு உள்ளாகலாம்.

    ஏனெனில், அவரும் யுதத்தில் ஈடுபட்ட இராணுவ அதிகாரியாவார். யுத்த குற்றச்சாட்டு தொடர்பாக ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவுக்கு இதனால் கனடா அரசாங்கம் தடையும் விதித்துள்ளது. ஏன் இந்த தடை விதிக்கப்பட்டது?

    யுத்தத்தின்போது மனித உரிமைகளை மீறினார்கள் என, நாளைய தினம் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால், இந்த சட்டத்தின் ஊடாக இவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக்கப்படுவார்கள்.

    மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தில் நேரடியாக ஈடுபடவில்லை. மாறாக யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவருமாறு தான் உத்தரவிட்டிருந்தார்.

    எனவே, நாளைய தினம் அவருக்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்குத் தொடரப்பட்டால், அவர் எவ்வளவு கோடிகளை நஷ்ட ஈடாக வழங்க வேண்டியேற்படுமோ என்பது தெரியாது.

    கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழ் பிரிவினைவாதிகள் இதேபோன்று வழக்கு தொடுத்தால்கூட, ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் இந்தத் தீர்ப்பை முன்னுதாரணமாக எடுத்து, அவருக்கும் கோடிக்கணக்கில் நஷ்டஈடு செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வரலாம்.

    முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் நஷ்டஈடு செலுத்த வேண்டியேற்படும். ஏன், பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவுக்கும் இதே நிலைமைதான் ஏற்படும்.

    ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பின் ஆபத்து குறித்தே இங்கு நாம் பேசுகிறோம்.  நாம் அந்தத் தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம்.

    ஆனால், இது இராணுவ அதிகாரிகள், முன்னாள் ஜனாதிபதிகளிடம் கூட தாக்கத்தை செலுத்தும்.

    இதனை நாடாளுமன்றமும் உணர்ந்துக் கொண்டு, இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறான சட்டத்திட்டங்களின் ஊடாக ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், இராணுவ அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியுமாக இருந்தால், இந்நாட்டில் எவருக்கும் தனது கடமைகளை செய்ய முடியாமல் போய்விடும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

    Related

    Category: இலங்கை கொழும்பு பிரதான செய்திகள்
    Tags: கோட்டாதயாசிறி ஜயசேகரமஹிந்தயுத்தக்குற்றச்சாட்டுவழக்குத் தாக்கல்
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 
    இலங்கை

    மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

    2025-12-01
    மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!
    BREAKING

    உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

    2025-12-01
    நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு
    இலங்கை

    நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

    2025-12-01
    வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து
    இலங்கை

    வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

    2025-12-01
    மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்!
    மன்னாா்

    மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்!

    2025-12-01
    வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு
    இலங்கை

    வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

    2025-12-01
    Next Post
    கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க பரிந்துரை செய்தார் முதலமைச்சர்!

    நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.