77வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் சிறப்பு வழிபாட்டின் போது பேசிய கார்டினல் ரஞ்சித், புதிய அரசியலமைப்பு, ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவை ரத்து செய்தல் மற்றும் அதிகாரத்தையும் சலுகைகளையும் அனுபவிப்பதை விட மக்களுக்கு சேவை செய்ய அரச தலைவர்களை வழிநடத்துதல் போன்ற புதிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் .
மேலும் அவர் தெரிவித்ததாவது “தற்போதைய அரசியலமைப்பு விரைவில் ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் அதிகாரத்தையும் சலுகைகளையும் அனுபவிக்காமல் நாட்டுக்கு சேவை செய்ய சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.