• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இந்தியாவில் வரலாற்று சிறப்புமிக்க ஒருநாள் தொடரை வென்ற நியூசிலாந்து!

இந்தியாவில் வரலாற்று சிறப்புமிக்க ஒருநாள் தொடரை வென்ற நியூசிலாந்து!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/01/19
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தூரில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்றது.

இந்த ஆட்டத்தில் விராட் கோலி தனது 54 ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். 

எனினும், டேரில் மிட்செல் மற்றும் க்ளென் பிலிப்ஸின் சதங்களால் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா சொந்த மைதானத்தில் தோல்வியடைந்தது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஷுப்மான் கில் தலைமையிலான அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுமாறு நியூஸிலாந்தை பணித்தது.

ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான டெவோன் கான்வே மற்றும் ஹென்றி நிக்கோல்ஸை குறைந்த ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்க வைத்தனர்.

பின்னர் வில் யங் மற்றும் மிட்செல் ஆகியோர் சிறந்த ஒரு இணைப்பாட்டத்தை வெளிப்படுத்தி நியூஸிலாந்து அணியின் இன்னிங்ஸை நிலைப்படுத்தினர்.

பின்னர் ராணா யங்கை 30 ஓட்டங்களுடன் வெளியேற்றினார்.

பின்னர் க்ளென் பிலிப்ஸ் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் கைதுபோர்த்து இன்னிங்ஸை வலுப்படுத்தினர்.

15 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் மிட்செல் தனது ஒன்பதாவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.

இது தொடரில் அவரது இரண்டாவது சதமாகும்.

அதேநேரம் பிலிப்ஸ் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கலாக 106 ஓட்டங்களை பெற்று ஒரு பெரிய ஓட்ட இலக்கினை நோக்கி நியூஸிலாந்து அணியை அழைத்துச் சென்றார்.

219 ஓட்டங்கள் எடுத்த இந்த கூட்டணி 44 ஆவது ஓவரில் முடிவுக்கு வந்தது.

பின்னர், அணித் தலைவர் மைக்கேல் பிரேஸ்வெல்லின் தாமதமான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 337/8 ஓட்டங்களை குவித்தது.

பின்னர், இந்திய அணியின் தலைவர் ஷுப்மான் கில் இந்தியாவுக்கான சேஸிங்கை பிரகாசமாகத் தொடங்கினார். 

எனினும், பவர்பிளேயில் ரோஹித் சர்மா வெளியேறியதால் நியூசிலாந்து ஆரம்பத்திலேயே பெரும் அடியைத் தந்தது.

தொடர்ந்து ஆறு ஓவர்களுக்குள் கில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தமையினால் இந்தியாவுக்கு மேலும் பின்னடைவுகள் ஏற்பட்டன.

13 ஆவது ஓவரில் 71/4 என்ற நிலையில் இந்தியா தடுமாறியது.

எனினும் நிலைத்து ஆடிய விராட் கோலி தனது 54 ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.

அத்துடன், ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் வீரரான ரிக்கி பாண்டிங்கைக் கடந்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது வீரரானார்.

ராணாவுக்கும் கோலிக்கும் இடையிலான 99 ஓட்டங்கள் கூட்டணி, ஜகாரி ஃபோல்க்ஸ் பந்துவீச்சினால் முடிவுக்கு வந்தது. 

அடுத்த பந்திலேயே ஜகாரி மீண்டும் ஒரு பந்து வீசி மொஹமட் சிராஜை பெவிலியன் பக்கம் திருப்பி அனுப்பினார்.

அப்போது இந்தியாவின் வாய்ப்புகள் மீண்டும் கேள்விக் குறியாகின.

எனினும் கோலி தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தார்.

மறுமுனையில் குல்தீப் யாதவ் அதிக பவுண்டரிகளை அடித்தார், ஆனால் இறுதியில் கிளார்க்கின் பந்தில் ஒரு ஷாட்டை தவறவிட்டதால் ஆட்டமிழந்தார்.

இறுதியாக இந்தியா 46 ஓவர்களில் 296 ஓட்டங்களுக்கு சலக விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூசிலாந்து 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

இதனிடையே இந்தியாவின் வெற்றிக்காக போராடிய விராட் கோலி 108 பந்துகளில் 124 ஓட்டங்களை எடுத்தார்.

இது சர்வதேச அரங்கில் அவரது 85 ஆவது சதமாகும்.

இது 3-0 என்ற வரலாற்று டெஸ்ட் தொடரை வென்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் தொடரை வென்ற சந்தர்ப்பம் இதுவாகும்.

இரு அணிகளும் புதன்கிழமை தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன.

இது பெப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கும் 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக அவர்களின் இறுதிப் போட்டியாகும்.

Image

Related

Tags: Daryl MitchellGlenn Phillips.INDIANew ZealandVirat Kohliஇந்தியாநியூசிலாந்துவிராட் கோலி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேசிய மாணவர் சிப்பாய் வருடாந்த விளையாட்டுப் போட்டி

Next Post

ஈரானின் கொடூரமான ஒடுக்குமுறை: இராணுவ நடவடிக்கை குறித்து டிரம்ப் தீவிர ஆலோசனை

Related Posts

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு
இலங்கை

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

2026-07-16
நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்
இலங்கை

நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

2026-07-16
பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!
இலங்கை

பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

2026-07-16
கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
ஆபிாிக்கா

கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

2026-07-16
“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!
இந்தியா

“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!

2026-07-16
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!
இலங்கை

நேற்று மாத்திரம் 1,195 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

2026-07-16
Next Post
ஈரானின் கொடூரமான ஒடுக்குமுறை: இராணுவ நடவடிக்கை குறித்து டிரம்ப் தீவிர ஆலோசனை

ஈரானின் கொடூரமான ஒடுக்குமுறை: இராணுவ நடவடிக்கை குறித்து டிரம்ப் தீவிர ஆலோசனை

யாழில். கார் விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு காயம்

யாழில். கார் விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு காயம்

வாழைத்தோட்டத்தில் வெளிநாட்டு கைத்துப்பாக்கி மீட்பு!

வாழைத்தோட்டத்தில் வெளிநாட்டு கைத்துப்பாக்கி மீட்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
மட்டுவில் 8 பேர் கைது

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் இருவேறு இடங்களில் கைது!

0
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!

0
சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

0
நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

0
சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

0
மட்டுவில் 8 பேர் கைது

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் இருவேறு இடங்களில் கைது!

2026-07-16
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!

2026-07-16
சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

2026-07-16
சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

2026-07-16
நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

2026-07-16

Recent News

மட்டுவில் 8 பேர் கைது

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் இருவேறு இடங்களில் கைது!

2026-07-16
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!

2026-07-16
சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

2026-07-16
சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

2026-07-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.