நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) எதிரான ஒரு மாத கால வழக்கை மீளப் பெற்றுள்ளனர்.
இந்த வழக்கு சென்னை மேல் நீதிமன்றத்தில் இன்று (10) காலை 10.30 மணிக்கு நீதிபதி பிடி ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது இந்த முன்னேற்றம் நிகழ்ந்தது.
இதன் மூலம் படத்திற்கான சட்டத் தடைகள் நீங்கியுள்ளன.
இப்போது, படத்திற்கு U, U/A அல்லது A சான்றிதழ் வழங்குவது குறித்த திருத்தக் குழுவின் முடிவுக்காக தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர்.
பெப்ரவரி 9 அன்று, திரைப்படத் தயாரிப்பாளர்கள் CBFCக்கு எதிரான ரிட் மனுவை மீளப் பெற மனு தாக்கல் செய்தனர்.
சட்டப் போராட்டத்தைத் தொடர்வதற்குப் பதிலாக படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளதால், படத்தைத் திரும்பப் பெறக் கோரி சென்னை மேல் நீதிமன்றப் பதிவேட்டில் ஒரு கடிதத்தை அவர்கள் சமர்ப்பித்தனர்.
விஜய்யின் இறுதிப் படமாக கருதப்படும் ஜனநாயகன் ஜனவரி 9 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாதது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சென்னை மேல் நீதிமன்றத்தை அணுகியதை அடுத்து, படத்தின் வெளியீடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
ஆரம்பத்தில், நீதிபதி பி.டி. ஆஷா, படத்திற்கு U/A 16+ சான்றிதழை வழங்க CBFCக்கு உத்தரவிட்டார்.
விசாரணையின் போது, சென்சார் வாரியத்தின் சட்டத்தரணிகள், படத்தில் உள்ள சில வசனங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடும் என்று வாரிய உறுப்பினர்களில் ஒருவரிடமிருந்து உள் முறைப்பாட்டைக் குறிப்பிட்டார்.
முறைப்பாட்டைத் தொடர்ந்து, CBFC தலைவர் சான்றிதழை நிறுத்தி வைத்து, படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்ப பரிந்துரைத்தார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து CBFC மேல்முறையீடு செய்து இடைக்காலத் தடை கோரியது.
பின்னர் ஜனநாயகன் குழு உயர் நீதிமன்றத்தை அணுகியது, அது தலையிட மறுத்து வழக்கை சென்னை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றியது.
ஜனவரி 27 அன்று, நீதியரசர்கள் குழு வழக்கை விசாரித்து, தனி நீதிபதி உத்தரவை இரத்து செய்து, புதிய விசாரணைக்கு உத்தரவிட்டது.
மேலும், மனுவைத் திருத்தவும் தயாரிப்பாளர்களை அனுமதித்தது.
















