முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிலைநிறுத்த முடியாது என்று பிரதிவாதி எழுப்பிய ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (14) நிராகரித்தது.
இந்தத் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க வழங்கினார்.
தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இந்த வழக்கில் பிரதிவாதிக்கு எதிரான சதிக்குற்றச்சாட்டை நிலைநிறுத்த முடியாது என்று பிரதிவாதியால் எழுப்பப்பட்ட ஆரம்ப ஆட்சேபனை ஆதாரமற்றது என்று குறிப்பிட்டார்.
தீர்ப்பைத் தொடர்ந்து, பிரதிவாதி யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பகிரங்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது.
எனினும், குற்றவாளிக் கூண்டில் இருந்து ஆஜரான பிரதிவாதி, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குத் தாம் குற்றமற்றவர் எனக் கூறினார்.
இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.













