அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசியின் இரண்டாவது டோஸிற்காக பைசர் தடுப்பூசியை ஏற்றுவது குறித்து ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதத்திற்குள் கொரோனா தடுப்பு வேலைத்திட்டத்திற்காக 52 இலட்சம் தடுப்பூசிகள் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவற்றுள் 22 இலட்சம் தடுப்பூசிகள் இந்த மாதம் கொண்டுவரப்படவுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.















