• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

சுயலாப கொள்ளையர்களால் உழைப்புகள் உறிஞ்சப்படுவதை ஏற்கமுடியாது – தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் சங்கம்

1.005 Views
4 years ago
70 0
0
Share
Facebook Twitter WhatsApp
    யே.பெனிற்லஸ் யே.பெனிற்லஸ்
    0 Subscriber

    கொள்ளை அடித்து எமது இருப்புக்களை பெருக்கிக்கொள்வது எமது நோக்கமல்ல. அதேநேரம் சுயலாப கொள்ளையர்களால் எமது பிரதேச கடற்றொழிலாளர்களது உழைப்புகள் உறிஞ்சப்படுவதை ஏற்கமுடியாதென தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    அவ்வாறு சங்கங்களின் சட்டவரையறையை அனுசரித்து செயற்படாத தொழிலாளர்கள் அனைவரும் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டு அவர்களது தொழில் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டவிரோதமானவையாக வரையறைசெய்து சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    தம்பாட்டி கடற்றொழிலாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து தமது கடற்றொழில் நடவடிக்கைகள் மற்றும் சந்தைப்படுத்தலில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை யாழ் ஊடக அமையத்தில் நடாத்தியிருந்தனர்.

    இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “விளையாட்டுக் கழகம், பாலர் பாடசாலை, நாடக மன்றம் என பல பொது அமைப்புகளை எமது சங்கத்தின் நிதியிலிருந்து கடந்த 60 ஆண்டுகளாக நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

    இந்நிலையில் தற்போதைய கொரோனா காரணமாக தொழில் நடவடிக்கைகள் பின்தங்கியுள்ள நிலையில் கடற்றொழில் மற்றும் சந்தைப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள சங்கம் சற்று தளர்வு நிலை கொடுத்துவந்தது.

    இதனை சாதகமாக பயன்படுத்திய எமது பிரதேசத்தில் எமது சங்கத்திலிருந்து சுயநலன்களுக்காக பிரிந்து சென்று சிலர் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதை சங்க ரீதியாக நாம் விசாரணைக்க உட்படுத்தும் போது வாழ்வாதார இழப்பு என்று காரணம் கூறி அனுதாபத்தை ஏற்படுத்தி தமது மோசடிகளையும் ஏமாற்று வேலைகளையும் மேற்கொள்கின்றனர். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    நாம் கடற்றொழில் அமைச்சரிடம் இவ்விடயத்தை கொண்டுசென்றிருந்தோம். அவரும் மூன்று தடவைகள் எமது பிரதேசத்திற்கு வந்து குறித்த பிரச்சினைக்கு இருதரப்பு  இணக்கப்பாட்டுடன் தீர்வு தந்திருந்தார்.

    இவ்வாறு தீர்வு காணப்பட் நிலையில் வேறொரு அரசியல் தரப்பினர் இதை குழப்பும் நோக்குடன் குறித்த தரப்பினரை தூண்டிவிட்டு ஊடகங்களில் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். அவ்வாறான செய்திகள் அனைத்தும் பொய்யானவை.

    அதேநேரம் கடற்றொழிலாளர்கள் தமது பிரச்சினையை கடற்றொழில் அமைச்சரிடம் தான் சென்று முறையிட முடியுமே தவிர விளையாட்டுத்துறை அமைச்சரிடம் முறையிடமுடியாது இதைத்தான் நாம் செய்தோம்.

    அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறந்த சமூக சேவகராகவும் மக்களின் வாழ்வியல் தொடர்பில் அதீத அக்கறை உடையவர் என்பதாலும் எமது இரு தரப்பினரையும் ஒற்றுமையுடன் இணைந்து செயற்படும் பொறிமுறையையே அன்றைய கூட்டத்தில் எடுத்துக் கூறி இணக்கப்பாட்டுக்கு வரச்செய்தார்.

    இன்று இன்னொரு தரப்பு அரசியல்வாதிகளின் ஏவுதலில் குறித்த தரப்பினர் நாக்கு புறழ்வுடன் பேசி பொய்யான கருத்துக்களை ஊடகங்களுக்கு கொடுத்துவருகின்றனர்.

    இதை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் எமது கடற்றொழில் சங்கங்களுடன் இணைந்து, அவர்கள் செயற்பாடாத பட்சத்தில் அவர்களது உறுப்புரிமைகளை இரத்து செய்து சட்ட நடவடிக்கைகளூடாக நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்.

    அத்துடன் இவர்களது இத்தகைய மோசடியான செயற்பாட்டை சமூக ஒற்றுமை என்று பார்த்து இனியும் பொறுத்துக் கொண்டிருக்கமுடியாது. குறித்த நடைமுறையை செய்வதற்கு தயாராகவே உள்ளோம்.

    மேலும் தனிப்பட்டவரது உறவுமுறைக்காக எமது உழைப்பை நாம் இழக்க முடியாது. 53 இலட்சம் ரூபாய் நிதி கடந்த காலத்தில் சூறையாபடப்பட்டுள்ளது. இதை சட்டரீதியாக அணுகியிருந்த நாம், அதனை கட்டுமாறு குறித்த நபருக்கு உத்தரவும் வழங்கப்பட்டிருந்தது.

    இந்த நிதியை செலுத்தவேண்டிய நிலை உருவாகுவதாலேயே குறித்த நபர் எமது சங்கத்திற்குள் இவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றார்.“ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

    Related

    Category: இலங்கை யாழ்ப்பாணம் வட மாகாணம்
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!
    இலங்கை

    லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

    2025-11-30
    கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி
    இலங்கை

    கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

    2025-11-30
    மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!
    இலங்கை

    மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

    2025-11-30
    அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!
    இலங்கை

    அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

    2025-11-30
    குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்
    இலங்கை

    25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

    2025-11-30
    அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக 1.2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கம்! 
    இலங்கை

    ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு  விசேட உரை!

    2025-11-30
    Next Post
    இந்தியா மற்றும் நியூஸிலாந்து டெஸ்ட் போட்டி : 6 ஆம் நாள் ஆட்டம் இன்று!

    இந்தியா மற்றும் நியூஸிலாந்து டெஸ்ட் போட்டி : 6 ஆம் நாள் ஆட்டம் இன்று!

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.