• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை: வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்!

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை: வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்!

shagan by shagan
2022/05/20
in இலங்கை
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என வலி.மேற்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பிரதேச சபையின் அமர்வு நேற்று )வெள்ளிக்கிழமை) தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றபோதே பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சபை அமர்வின்போது உறுப்பினர் திருமதி ச.சுபாஜினி மேற்படி பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார். வன்னியில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு தாமும் ஒரு சாட்சியாளர் என அவர் எடுத்துரைத்தார். அங்கு இடம்பெற்ற வேதனைகளையும் வலிகளையும் உணர்ந்தவர் என்ற அடிப்படையில் அது இனப்படுகொலையே என அவர் கூறினார்.

இதன்போது, உறுப்பினர்களான ந.பொன்ரசா, சி.இதயகுமாரன், ச.ஜெயந்தன், சி.குணசிறி ஆகியோரும் இறுதியில் தவிசாளரும் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக தமது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினர்.

இறுதி யுத்தம் என்ற பெயரில் அரசாங்கம் திட்டமிட்ட இனப்படுகொலையை அரங்கேற்றியது என்பதற்கு பல சான்றாதாரங்கள் உள்ளன என உறுப்பினர் பொன்ராசா தெரிவித்தார்.

அங்கு மூன்று இலட்சம் மக்கள் மட்டுமே சிக்கியிருக்கின்றார்கள் என அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால், கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சிய ஐந்து இலட்சம் வரையான பொதுமக்கள் வவுனியா நலன்புரி நிலையங்களில் தஞ்சமடைந்தனர்.

ஆனால், ஆறு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கு வசிக்கின்றனர் என புள்ளிவிபரங்கள் தெரிவித்திருந்தன. பல இலட்சம் பேரை திட்டமிட்டுக் கொன்றுவிக்கும் நோக்கத்துடனேயே அரசு யுத்தத்தை நடத்தியது என அவர் எடுத்துரைத்தார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஒரு இனப்படுகொலையாளி எனவும் நவாலி சென்.பீற்றர் தேவாலயம், செம்மணிப் படுகொலை உள்ளிட்ட பல படுகொலைகள் அவரது காலத்திலேயே இடம்பெற்றவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று, கொல்லப்பட்ட உறவுகளுக்காக தீபமேற்றி அஞ்சலி செலுத்திய சந்திரிகா அப்படத்தை தமது முகப்புத்தகத்தில் தரவேற்றி முப்பது வருட காலம் இடம்பெற்றது இனப்படுகொலை என பதிவிட்டிருக்கிறார் எனவும் கூறினார்.

உலகில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள், போன்ற இரசாயன ஆயுதங்களை தமிழ் மக்கள் மீது வீசி கொடூரமாக அவர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என உறுப்பினர் ஜெயந்தன் தெரிவித்தார்.

தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை கனேடிய நாடாளுமன்றமே ஏற்று தீர்மானம் நிறைவேற்றியதை சுட்டிக்காட்டிய அவர், சர்வதேசம் இன்று தமிழர் பக்கம் தமது பார்வையைத் திருப்பியிருக்கின்றது எனவும் கூறினார்.

வன்னியில் அப்பாவி மக்கள் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என உறுப்பினர் இதயகுமாரன் தமது உரையில் தெரிவித்தார். உணவைக்கூட அனுப்ப மறுத்து அரசாங்கம் தமிழ் மக்களை படுகொலை செய்தது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

இதேவேளை, தாமும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் யுத்த்தின் கொடூரங்களை எடுத்துரைத்தார் உறுப்பினர் குணசிறி.

கடந்த காலங்களில் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வருடம் தடையின்றி நடைபெற்றதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இறுதியில், தவிசாளர் தமது உரையில், வன்னியில் எமது மக்கள் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதை ஆவணப்படுத்தவேண்டிய, இதற்கு நீதி கோரவேண்டிய வரலாற்றுக் கடமை எமக்கு உண்டு.

உலகமே பார்த்துக்கொண்டிருக்க எமது மக்கள் திட்டமிட்டு இன அழிப்பு செய்யப்பட்டார்கள். நாகரிகம் உள்ள மனித இனம் செய்யாத செயலை இலங்கை அரச படைகள் அரங்கேற்றியிருக்கின்றது.

இங்கு இடம்பெற்றது இனப்படுகொலையே என்ற தீர்மானத்தை நாம் இன்று இந்த உயரிய சபையில் நிறைவேற்றுகின்றோம். ஏனைய சபைகளும் இத்தீர்மானத்தை நிறைவேற்றி, இந்த நூற்றாண்டில் இலங்கை அரச படைகள் நடத்திய அநாகரிகத்தை ஆவணப்படுத்தவேண்டும். – என்றார்.

இதேவேளை, இத்தீர்மானத்தை முன்வைத்து சபை உறுப்பினர்கள் உரையாற்றிக்கொண்டிருந்தபோது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறிச் சென்றிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிபொருள் பற்றாக்குறையானது O/L பரீட்சையை பாதிக்கும் என எச்சரிக்கை

Next Post

இலங்கை தொடர்பில் ஜி-07 நாடுகள் எடுத்துள்ள தீர்மானத்தினை வரவேற்றார் ரணில்

Related Posts

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
JUST IN

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றுகின்ற சிறப்பு உரை….

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
JUST IN

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

2025-12-05
5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!
இலங்கை

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

2025-12-05
பன்முகத்தன்மையை மதிக்கும் தேசமாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்-ஜனாதிபதி!
இலங்கை

நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

2025-12-05
சீரற்ற வானிலை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை பகுதியில் மண்சரிவு அபாயம் – பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள்!
இலங்கை

சீரற்ற வானிலை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை பகுதியில் மண்சரிவு அபாயம் – பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள்!

2025-12-05
உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது: இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!
ஆசிரியர் தெரிவு

உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது: இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!

2025-12-05
Next Post
மே பதினெட்டு:  ரணில்   நினைவுகூர்த்தலைத் தடுப்பாரா? நிலாந்தன்.

இலங்கை தொடர்பில் ஜி-07 நாடுகள் எடுத்துள்ள தீர்மானத்தினை வரவேற்றார் ரணில்

அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஹரீன் மற்றும் மனுஷ நாணயக்காரவின் கட்சி உறுப்புரிமைகள் இடைநிறுத்தம்!

அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஹரீன் மற்றும் மனுஷ நாணயக்காரவின் கட்சி உறுப்புரிமைகள் இடைநிறுத்தம்!

பீடைகொல்லிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் – மஹிந்தானந்த

கண்ணுக்குத் தெரியாத சக்தியினால் மஹிந்த கெளரவமான பிரியாவிடையை இழந்துள்ளார் - மஹிந்தானந்த

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றுகின்ற சிறப்பு உரை….

0
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

0
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

0
5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

0
சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இங்கிலாந்தில் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகும் குழந்தை வறுமை ஒழிப்பு உத்தி !.

0
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றுகின்ற சிறப்பு உரை….

2025-12-05
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

2025-12-05
5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

2025-12-05
இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை  தொட்ட சம்பவம் !

இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை தொட்ட சம்பவம் !

2025-12-05

Recent News

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றுகின்ற சிறப்பு உரை….

2025-12-05
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

2025-12-05
5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

2025-12-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.