இந்திய விமானப்படையின் மல்டி-ரோல் போர் விமானத் திட்டத்திற்காக 114 பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான 3.25 இலட்சம் கோடி ரூபா ஒப்பந்தத்திற்கு இந்த வாரம் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் டெல்லி வருகைக்கு சில நாட்களுக்கு முன்னதாக நம்பகத் தகுந்த வட்டாரங்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்திய ஊடகச் சேவையான NDTV இந்த விடயத்தைக் கூறியுள்ளது.
ஒப்புதல் அளிக்கப்பட்டதும், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தமாக மட்டுமல்லாமல், இந்தியாவில் சுமார் 100 ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகளையும் உள்ளடக்கும்.
இதில் உயர்தர போர் ஜெட் தொழில்நுட்பத்தை மாற்றுவதும், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஒரு மூலோபாய கூட்டாண்மையும் அடங்கும்.
மேலும், இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டவுடன், இரட்டை எஞ்சின் கொண்ட, பல்துறை போர் விமானமான ரஃபேலின் மிகப்பெரிய பிரெஞ்சு அல்லாத இயக்குநராக இந்தியாவின் அந்தஸ்தை அடிக்கோடிட்டுக் காட்டும்.
இது உலகின் மிகவும் ஆபத்தான ஒன்றாக பரவலாகக் கருதப்படுகிறது.
மேலும், வான் மேன்மை மற்றும் துல்லியமான தாக்குதல் பணிகளைச் செய்வதற்கு பெயர் பெற்றது.
இந்தியாவிடம் ஏற்கனவே 36 ரஃபேல் விமானங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
















