புதன்கிழமைகளில் நடைபெறும் அனைத்து பயிற்சி வகுப்புகளையும் நிறுத்தி வைக்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனினும், இது ஒரு கட்டாய உத்தரவு அல்ல என்றும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு விடுக்கப்பட்ட ஒரு வேண்டுகோள் மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
புதன்கிழமைகளில் பயிற்சி வகுப்புகளை நடத்துவது தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்கள் குறித்த விசாரணைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்கு அதிகத் திறனை ஒதுக்குவதையும், எரிபொருள் நுகர்வின் திறமையான நிர்வாகத்தை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு, அரசாங்கம் அண்மையில் பல சிறப்பு முடிவுகளை எடுத்துள்ளது.
அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை, ஒவ்வொரு புதன்கிழமையும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சுகாதாரம், வங்கி, மின்சாரம், குடிநீர் வழங்கல், துறைமுகங்கள், சுங்கம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த முடிவு பொருந்தாது.












