• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

திரைமறைவிலிருந்து இந்தியா நடுநிலை வகித்தமை ஈழத் தமிழர்களுக்கு வேதனையே – கோவிந்தன்

1.026 Views
3 years ago
71 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Litharsan Litharsan
    0 Subscriber

    பல நாடுகளை திரைமறைவிலிருந்து இயக்கிய இந்தியா நடுநிலை வகித்தமை ஈழத் தமிழர்களை வேதனைக்கு உட்படுத்தும் விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

    எனவே, ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மட்டக்களப்பில், அவரது அவலுகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    அவர் கூறுகையில், “இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட பிரேரணை அமோக வரவேற்புடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    22 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாகவும் 11 நாடுகள் எதிராகவும் 14 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்துள்ளன.

    இந்நிலையில், இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மீசையில் மண் ஒட்டவில்லையென்ற வகையில் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றார். 22 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் ஏனைய நாடுகள் எதிராகவுள்ளதாக காட்ட முற்படுகின்றனர்.

    இலங்கை அரசாங்கமும் அவர்களின் அமைச்சர்களும் யாதார்த்ததினைப் புரிந்துகொள்ளாத நிலையிலேயே செயற்பட்டு வருகின்றனர்.

    இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற நிலையில் பல நாடுகளைத் திரை மறைவிலிருந்து இந்தியா இயக்கியது.

    இந்தப் பிரேரணை வெற்றிபெற வேண்டும், இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர், அவர்களுக்கு பூரண அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறிய இந்தியா இந்தப் பிரேரணையில் நடுநிலை வகித்தது ஈழத் தமிழர்களை வேதனைக்கு உள்ளாக்கிய விடயமாகவே தமிழர்கள் பார்க்கின்றனர்.

    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகிய காலம் தொடக்கம் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இந்தப் பிரேரணையைக் கொண்டுவந்த நாடுகளைக் கடுமையாக இனவாத ரீதியில் விமர்சனம் செய்துவந்தனர்.

    ஆனால், இறுதி நேரத்தில் இவர்கள் வாய்கள் அடைக்கப்பட்டு மௌனிகளாக்கப்பட்டார்கள். இலங்கையினைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பங்குபற்றியவர்கள் இங்குள்ள அமைச்சர்களை அடக்கிவாசிக்குமாறு கூறியதாகவும் அறிகின்றோம்.

    அந்தப் பிரேரணையின் கனதியை, அதனை ஆதரிக்கும் நாடுகளின் கனதியை, அடக்கிவாசிக்காவிட்டால் எதிர்காலத்தில் இலங்கையில் ஏற்படப்போகும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை நிறுத்துவதற்காக குறித்த வேசங்களைக் கக்கிய அமைச்சர்களை அடக்கிவாசிக்குமாறு கூறப்பட்டதும் அவர்கள் அடக்கிவாசித்ததும் எமக்கு சாதகமானதாகவே இருந்தது.

    இன்றுகூட வெளியிறவுத்துறை அமைச்சர், மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகவும் 13ஆவது திருத்தம் தொடர்பாகவும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகவும் பேசுகின்றார் என்றால் ஐ.நா. தீர்மானத்தின் கனதியின் விளைவே அதுவாகும்.

    மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் முடிந்ததன் பின்னர் சிலவேளைகளில் இந்த அமைச்சர்கள் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போன்று செயற்படுவார்கள் என்பது நாங்கள் யாவரும் அறிந்த விடயமாகும். இருந்தபோதிலும் இலங்கை தொடர்பாக சர்வதேசம் கொண்டுள்ள நிலைப்பாட்டினை இலங்கை புரிந்து நடக்கும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

    பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையானது அப்பட்டமான மனித உரிமை மீறலாகவே இருக்கின்றது.

    ஜனநாயக போராட்டத்தில் பங்குபற்றியவர்களை அச்சுறுத்துவதும், சட்டத்தின் முன்பாக அவர்களை நிறுத்துவதற்காக பொலிஸ் நிலையங்கள் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுத்து நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சிகள் முன்னெடுப்பதும் அராஜகமான செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    Category: இலங்கை கிழக்கு மாகாணம் பிரதான செய்திகள் மட்டக்களப்பு
    Share23Tweet8Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    சீனாவின் தாமதத்தால் இலங்கைக்கு IMF உதவி கிடைக்காமல் போகும் அபாயம்
    இலங்கை

    சீனாவின் தாமதத்தால் இலங்கைக்கு IMF உதவி கிடைக்காமல் போகும் அபாயம்

    2023-10-04
    ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது
    இலங்கை

    மகளைக் கண்டித்ததால் ஆசிரியரைத் தாக்கிய தந்தை!

    2023-10-04
    அதிரடி அறிவிப்பை வெளியிட்ட லிட்ரோ!
    இலங்கை

    எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பு – முழு விபரம் இதோ !

    2023-10-04
    பிரதமர் பதவி விலகமாட்டார் – பிரதமர் அலுவலகம்
    இலங்கை

    “சர்வதேச விசாரணை வேண்டாம் ஜனாதிபதியின் கருத்தே எனது கருத்து” – மஹிந்த ராஜபக்ஷ

    2023-10-04
    யாழில் ஜூஸ் பக்கெற்றுகளுக்குத் தடை!
    இலங்கை

    10ஆம் திகதி வரை மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் – நீதிமன்றம்

    2023-10-04
    போராட்டத்தில் புகைப்படம் எடுத்த பொலிஸாரால் சலசலப்பு!
    இலங்கை

    போராட்டத்தில் புகைப்படம் எடுத்த பொலிஸாரால் சலசலப்பு!

    2023-10-04
    Next Post
    ஐ.நா. விவகாரத்தில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

    அரசாங்கத்தின் இயலாமை காரணமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது - திஸ்ஸ அத்தநாயக்க

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.