• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
ஆப்கானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க- நேட்டோ படைகளின் உயர் தளபதி பதவி விலகல்!

ஆப்கானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க- நேட்டோ படைகளின் உயர் தளபதி பதவி விலகல்!

Anoj by Anoj
2021/07/13
in ஆசியா, உலகம்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் உயர் தளபதி ஜெனரல் ஆஸ்டின் ஸ்கொட் மில்லர், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

அவர் பதவியில் இருந்து விலகி, அவரது பொறுப்புக்களை பிராந்தியக் கட்டுப்பாடுகளை நிர்வகிக்கும் கீழ்நிலை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) நடந்த எளிமையான நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய பொறுப்புகளை இரு அமெரிக்க ஜெனரல்களிடம் ஒப்படைத்தார்.

அவர்களில் ஒருவர் புளோரிடாவில் இருந்தபடி வெளிநாட்டில் அமெரிக்கப் படைகளை வழிநடத்துபவர். மற்றொருவர் படை விலக்கலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருக்கப்போகும் சுமார் 650 வீரர்களுக்கு தளபதியாக இருப்பவர்.

எதிர்வரும் ஒகஸ்ட் 31ஆம் திகதியுடன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ள நிலையில், அதன் ஒருபகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ‘செப்டம்பர் 11’ தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒசாமா பின் லேடன், அல் கொய்தாவைச் சேர்ந்தவர்களுடன் தலிபான்கள் சேர்ந்து செயற்பட்டதால் ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு செய்து புதிய ஆளுகையை அமெரிக்கா நிறுவியது.

ஆஃப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான்களை 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை அகற்றியது.

முன்னதாக, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அல் கொய்தா அல்லது வேறு தீவிரவாத குழுக்கள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று தலிபான் இயக்கத்தினர் அளித்த உறுதிமொழயின்பேரில், ஆஃப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கா, நேட்டோ கூட்டுப்படை அங்கிருந்து வெளியேற கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டன.

ஆஃப்கானிஸ்தானில் செப்டம்பர் மாதத்துக்குள் எஞ்சிய வெளிநாட்டு படையினர் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிரித்தானியா உள்ளிட்ட பிற நேட்டோ நாடுகளின் படைகளும் பைடன் விதித்த காலக்கெடுவுக்கு முன்னரே தங்களது படைகளை திரும்பப் பெற்றுவிட்டன.

இதனால், தலிபான் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் இதுநாள்வரை வெளிநாட்டு துருப்புகளின் உதவியுடன் போரிட்டு வந்த ஆஃப்கான் படையினர் பலவீனம் அடையலாம் என்ற கவலை அதிகரித்துள்ளது.

எனினும், ஆஃப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளை எதிர்கொள்ள முழு திறன் பெற்றுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரஃப் கானி வலியுறுத்தி வருகிறார்.

இதனிடையே, மேற்கத்திய நாடுகளின் படைகள் வெளியேறியிருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளில் தலிபான்கள் முன்னேறி வருகின்றனர். அத்துடன் ஆப்கானிஸ்தான் நாட்டின் 85 சதவீதப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாக, தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

Tags: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்ஆப்கானிஸ்தான்நேட்டோ படைபுளோரிடாமேற்கத்திய நாடுஜெனரல் ஆஸ்டின் ஸ்கொட் மில்லர்
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம்
உலகம்

உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம்

2023-01-28
கிழக்கு ஜெருசலேமில் ஏழு பேர் சுட்டுக் கொலை!
உலகம்

கிழக்கு ஜெருசலேமில் ஏழு பேர் சுட்டுக் கொலை!

2023-01-28
ஆஷ்விட்ஸ் ஆண்டு விழா: உக்ரைன் போரால் ரஷ்யாவுக்கான அழைப்புக்கு போலந்து மறுப்பு!
உலகம்

ஆஷ்விட்ஸ் ஆண்டு விழா: உக்ரைன் போரால் ரஷ்யாவுக்கான அழைப்புக்கு போலந்து மறுப்பு!

2023-01-28
அமெரிக்காவின் தாக்குதலில் ஐஎஸ்ஐஎல் தலைவர் உயிரிழப்பு!
உலகம்

அமெரிக்காவின் தாக்குதலில் ஐஎஸ்ஐஎல் தலைவர் உயிரிழப்பு!

2023-01-27
மத்திய லண்டனுக்கு இயக்கப்படும் அதிவேக ரயில் திட்டங்கள் முற்றிலும் கைவிடப்படலாம்?
இங்கிலாந்து

மத்திய லண்டனுக்கு இயக்கப்படும் அதிவேக ரயில் திட்டங்கள் முற்றிலும் கைவிடப்படலாம்?

2023-01-27
இலங்கையிலிருந்து நாடு திரும்பிய முன்னாள் FBI அதிகாரி கைது!
இலங்கை

இலங்கையிலிருந்து நாடு திரும்பிய முன்னாள் FBI அதிகாரி கைது!

2023-01-27
Next Post
மன்னாரிலுள்ள கலாமன்றங்களுக்கு இசைக்கருவிகள் வழங்கி வைப்பு

மன்னாரிலுள்ள கலாமன்றங்களுக்கு இசைக்கருவிகள் வழங்கி வைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நீடிப்பு!

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!

2023-01-20
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு!

இல்லாத கூட்டமைப்பிற்கு எவ்வாறு தலைவராக இருக்க முடியும் – இரா.சம்பந்தனிடம் கேள்வி!

2023-01-18
ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!!

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!!

2023-01-15
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

குறைக்கப்பட்டது 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகள்!

2023-01-18
ஐந்து தமிழ்க் கட்சிகள் இணையும் புதிய கூட்டணி நாளை உதயமாகின்றது?

ஐந்து தமிழ்க் கட்சிகள் இணையும் புதிய கூட்டணி நாளை உதயமாகின்றது?

2023-01-12
உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம்

உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம்

2023-01-28
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா சிறப்பான வெற்றி!

இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா சிறப்பான வெற்றி!

2023-01-28
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- புதிதாக 48 பேரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- புதிதாக 48 பேரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை!

2023-01-28
புதிய கூட்டணியின் பெயர், தலைமை தொடர்பாக தீர்மானிக்கவில்லை – விமல்

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளித்தால் பிரச்சினைகள் ஏற்படும் – விமல்

2023-01-28
இலங்கை மின்சார சபையின் கோரிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நிராகரிப்பு!

இலங்கை மின்சார சபையின் கோரிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நிராகரிப்பு!

2023-01-28

Recent News

உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம்

உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம்

2023-01-28
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா சிறப்பான வெற்றி!

இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா சிறப்பான வெற்றி!

2023-01-28
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- புதிதாக 48 பேரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- புதிதாக 48 பேரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை!

2023-01-28
புதிய கூட்டணியின் பெயர், தலைமை தொடர்பாக தீர்மானிக்கவில்லை – விமல்

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளித்தால் பிரச்சினைகள் ஏற்படும் – விமல்

2023-01-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.