• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு

கடலட்டை பண்ணை விடயத்தில் வெளிப்படையான பகல் கொள்ளை நடந்துள்ளது – சிறிதரன்

1.138 Views
4 years ago
79 1
0
Share
Facebook Twitter WhatsApp
    யே.பெனிற்லஸ் யே.பெனிற்லஸ்
    0 Subscriber

    கடலட்டை பண்ணை விடயத்தில் வெளிப்படையான பகல் கொள்ளை நடந்துள்ளது. அமைச்சரோடு சேர்ந்தவர்களும் இதற்கு உடந்தையாக இருக்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

    நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கடற்றொழில் அமைச்சினுடைய நேரடி கண்காணிப்பில் அமைச்சின் தவறான செயற்பாடுகள் ஊடாக சீன நாட்டவர்களுக்கு கடலட்டை பண்ணைகளை வழங்குகின்ற செயல்திட்டங்கள் முதன்மை பெற்ற விடயங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

    குறிப்பாக கிளிநொச்சியின் எல்லையாக இருக்கின்ற கௌதாரிமுனை கல்முனை பகுதியிலே குய்லன் என்கிற தனியார் நிறுவனம் கடலட்டை பண்ணை அமைத்து இருக்கின்றது. இதற்கான அனுமதி  பிரதேச செயலாளரிடமோ கடற்றொழில் திணைக்களத்திடமோ  பெற்றுக்கொண்டதாக இல்லை.

    மற்றொரு நாட்டைச் சேர்ந்த குடியுரிமை இல்லாதவர்கள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க எல்லை பரப்புக்குள் அந்த சங்கத்தினுடைய அனுமதி இல்லாமல் வலுக்கட்டாயமாக அந்த இடங்களில் பண்ணைகளை அமைத்து அந்த இடங்களை பிடித்தது என்பது காலங்காலமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற கடற்றொழிலாளர்களை இன்னமும் பாதிக்கும்.

    எமது பிரதேச மீனவர்களின் நலன் கருதி அந்த மக்களுக்கான பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கான உபகரணங்களை வழங்கி அட்டை பண்ணைகளை அந்த மக்கள் செய்யக்கூடிய வகையில் அந்த வேலைத் திட்டத்தை செய்திருக்க முடியும்.

    ஆனால் நேரடியாகச் சென்று கௌதாரிமுனையை நாம் பார்த்த பொழுது அரியாலையிலே இருக்கின்ற அட்டை பண்ணை குஞ்சுகளை கௌதாரிமுனையில் வைத்து ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    அதற்கான ஒப்பந்தமும் கூட எழுதப்பட்டிருக்கின்றது. இரு தரப்பும் கையொப்பமிடாமல் சட்டத்தரணியின் கீழ் ஒப்பந்தம் செய்து வெளியிட்டுக் கொண்டதே தவிர இதுவரை இரு தரப்பும் ஒப்பந்தம் செய்யவில்லை.

    இது வெளிப்படையான பகல் கொள்ளை. அமைச்சரோடு சேர்ந்தவர்களும் இதற்கு உடந்தையாக இருக்கின்றனர். தாங்கள் நேர்மையாக நடந்தோம். இதில் எந்தவிதமான கையூட்டலும் நடக்கவில்லை என்றால் நேர்மையாக இதனை வெளிப்படுத்த வேண்டும்.

    அரசாங்க அதிபருக்கு இது தொடர்பில் தெரியாது பிரதேச செயலருக்கு  தெரியாது. இதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். அனைத்து மக்களுக்கும் சார்பான நடவடிக்கையை நாங்கள் முன்னெடுப்போம்.

    இது இந்த நாட்டினுடைய குறிப்பாக தமிழர் வாழ்கின்ற பிரதேசங்களில் அவர்களுடைய இடங்களைப் பிடித்து இன்னொருவருக்குக் கொடுப்பதும் மக்கள் கையேந்தி நிற்கின்ற நிலையிலே அதனை தொடர்ந்து வைத்திருப்பதற்கு அரசாங்கம் முகவர்களாக இந்த அமைச்சர்களை  பயன்படுத்துகின்றது என்பதுதான் உண்மை.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Related

    Category: ஆசிரியர் தெரிவு இலங்கை யாழ்ப்பாணம் வட மாகாணம்
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    பாதிக்கப்பட்ட மக்களுக்காக HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நன்கொடை!
    இலங்கை

    பாதிக்கப்பட்ட மக்களுக்காக HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நன்கொடை!

    2025-12-04
    ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வு தேவை – ஜனாதிபதி வலியுறுத்து!
    இலங்கை

    ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வு தேவை – ஜனாதிபதி வலியுறுத்து!

    2025-12-04
    நிவாரணப் பணிகளை வலுப்படுத்த மற்றொரு ஜப்பான் விசேட மருத்துவக் குழு இலங்கைக்கு வருகை!
    இலங்கை

    நிவாரணப் பணிகளை வலுப்படுத்த மற்றொரு ஜப்பான் விசேட மருத்துவக் குழு இலங்கைக்கு வருகை!

    2025-12-04
    2ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை
    இலங்கை

    நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

    2025-12-04
    சீரமைப்பு பணியிலிருந்த மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
    இலங்கை

    சீரமைப்பு பணியிலிருந்த மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

    2025-12-04
    குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி!
    இலங்கை

    குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி!

    2025-12-04
    Next Post
    நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி!

    ஆசிரியர், அதிபர், கல்விசாரா ஊழியர்களென யாழில் 72 வீதமானவர்களுக்கு தடுப்பூசி!

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.