• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வடிகான் பகுதியை அபகரிக்க முயற்சி!

1.067 Views
4 years ago
74 1
0
Share
Facebook Twitter WhatsApp
    shagan shagan
    0 Subscriber

    மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள  வடிச்சல் பகுதி யை அபகரிக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சி மாநகர முதல்வரினால் இன்று (திங்கட்க்கிழமை) முறிடியக்கப்பட்டுள்ளதுடன் அபகரிப்புக்கு கொண்டுவரப்பட்ட பொருட்களும் மாநகரசபையினால் கையகப்படுத்தப்பட்டன.

    மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வடிச்சல் பகுதியை தொடர்ச்சியாக அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அவற்றினை தடுத்து நிறுத்துதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

    மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மழைகாலங்களில் ஏற்படும் வெள்ளத்தினை வாவியில் கொண்டுசேர்க்கும் பகுதியாக குறித்த வடிச்சல் பகுதி காணப்படுகின்றது.

    நீண்டகாலமாக குறித்த பகுதியை சிலர் அபகரிக்கும் நோக்குடன் வேலி அடைக்க முற்படும் நிலையில் அவற்றினை தடுக்கும் செயற்பாடுகளை பிரதேச மக்களும் மாநகரசபையும் பிரதேச செயலகமும் இணைந்து முன்னெடுத்துவருகின்றது.

    இன்று சிலர் குறித்த வடிச்சல் பகுதியை வேலியிட்டு அடைக்கமுற்பட்டபோது அங்கு சென்ற மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் குறித்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்தியதுடன் அது தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவனின் கவனத்திற்கு கொண்டுசென்றதை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற பிரதேச செயலாளர் குறித்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்தினார்.

    குறித்த பகுதியானது அரசாங்கத்திற்கு சொந்தமானது எனவும் குறித்த பகுதியில் எந்த நடவடிக்கையினையும் முன்னெடுக்கவேண்டாம் எனவும் இதன்போது பிரதேச செயலாளர் வேலியடைப்பில் ஈடுபட்டவர்களுக்கு உத்தரவிட்டார்.

    அப்பகுதியானது அரசகாணியாகவும் வடிச்சல் பகுதியாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிலர் போலியான ஆவனங்களைக்கொண்டுவந்து பொலிஸாரின் ஆதரவுடன் குறித்த பகுதியை அபகரிக்க முனைவதாக மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

    ஐந்தாவது தடவையாக இவ்வாறான போலி ஆவணங்களைக்கொண்டுவந்து இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.இதற்கு முன்னர் காணி அடைக்கும்போது அதனை தடுத்த பொதுமக்கள் நான்கு பேருக்கு எதிராக குறித்த நபர்களினால் பொலிஸில் முறைப்பாடுசெய்துள்ள நிலையில் பொலிஸார் அவர்களுக்கு இந்த காணிக்குள் செல்லக்கூடாது என தடைவிதித்துள்ளனர்.காணிவிடயங்களில் தலையிடுவதற்கு பொலிஸாருக்கு அதிகாரமில்லை.அரசகாணியை அபகரிப்பவர்கள் ஆதாரம் இருந்தால் நீதிமன்றம் சென்றுவரவேண்டும்.

    அவ்வாறில்லாமல் இவ்வாறு சட்டவிரோத காணி அபகரிப்பினை முன்னெடுப்பவர்கள் பொலிஸாரின் துணையுடன் வருவது இலங்கையின் சட்டத்தினை மதிக்கும் செயற்பாடு இல்லை

    .அரசகாணிகளை பாதுகாக்கவேண்டிய பொலிஸ் சட்ட விரோத ஆபகரணங்களைக்கொண்டு காணிகளை அபகரிப்பவர்களுக்கு பக்கபலமாக இருப்பது கவலைக்குரியது.இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடைவிதித்த பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கையெடுக்கவேண்டும்.

    எதிர்வரும் காலத்தில் குறித்த பகுதியில் மாநகரசபையினால் விசேட வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து பாதுகாக்கவுள்ளதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.

    Related

    Category: இலங்கை
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!
    இலங்கை

    லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

    2025-11-30
    கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி
    இலங்கை

    கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

    2025-11-30
    மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!
    இலங்கை

    மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

    2025-11-30
    அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!
    இலங்கை

    அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

    2025-11-30
    குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்
    இலங்கை

    25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

    2025-11-30
    அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக 1.2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கம்! 
    இலங்கை

    ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு  விசேட உரை!

    2025-11-30
    Next Post
    புலம்பெயர் தமிழர்களினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்- சார்ள்ஸ் நிர்மலநாதன்

    புலம்பெயர் தமிழர்களினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்- சார்ள்ஸ் நிர்மலநாதன்

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.