• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

பாலாறும், தேனாறும் பொழிவதாக சொன்ன இந்த அரசாங்கம் மந்தகதியில் – ஆர்.ராஜாராம்

985 Views
7 months ago
68 1
0
Share
Facebook Twitter WhatsApp
    shagan shagan
    Subscriber

    பாலாறும், தேனாறும் பொழிவதாக சொன்ன இந்த அரசாங்கம் இன்று முடங்கி கிடப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம் தெரிவித்தார்.

    நுவரெலியா, தலவாக்கலையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    அவர் மேலும் தெரிவித்ததாவது, ”மலையக தோட்ட தொழிலாளர்கள் எனும் தேசிய இனத்தின் குரல்வளை நசக்கப்படும் பொழுது உரிமையற்றவர்களாகவும், உணர்வற்றவர்களாகவும், நாயிழும் கேவலமாக சொந்த மண்ணில் நடாத்தப்படுகின்ற பொழுது பொங்கி எழுந்து கேள்விகளை எழுப்பினால் அவர்களுக்கு எதிராக அடக்குமுறை செய்யக்கூடிய ஒரு காட்டு மிராண்டி தனமான செயல்பாடை இந்த தோட்ட நிர்வாகங்கங்கள் செய்து வருகின்றது. அதற்கு இந்த அரசாங்கம் உடந்தையாக இருக்கின்றது.

    இன்று தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களிடமிருந்து 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என வலியுறுத்துவதோடு, அப்பொழுது தான் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க முடியும் என கூறுகின்றது.

    தோட்டங்க்ள காடாகி காணப்படுகின்றது. இந்த தோட்ட நிர்வாகத்திற்கு சவாலை விடுகின்றேன். தோட்ட நிர்வாகம், தோட்ட அதிகாரிகள் தோட்டத்தில் இறங்கி 20 கிலோ கொழுந்து பறித்து காட்டினார்கள் என்றால் அவர்கள், கொடுக்கின்ற நிபந்தனைகளுக்கு நாங்கள் ஒத்துக்கொள்கின்றோம்.

    ஆக, நிர்வாக அடக்குமுறை காரணமாக பல தோட்டங்களில் உள்ள மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றார்கள். இதற்கு காரணம் நிர்வாகம் தொழிலாளர்களை அடிமைகளாக வழி நடத்துவது தான். அதேவேளை, ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதாக கூறப்பட்டு இன்று மூன்று நாட்கள் மாத்திரமே தொழில் வழங்குகின்றார்கள். நான்காவது நாள் தொழிலுக்கு சென்றால் தினக்கூலிகளாக நடத்துகின்றார்கள்.

    தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை இவ்வாறு நசுக்குவது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியாதது ஒன்றல்ல.  அனைத்து விடயங்களும் அரசாங்கத்திற்கு தெரியும். நிர்வாகம் மற்றும் அரசாங்கம் வேடிக்கை பார்கின்றனர்.

    நாட்டில் வரவு செலவு இடம்பெறும் திட்டத்தில் சில யோசனைகளுக்கு தீர்வு வழங்குவதாக கூறும் இந்த அரசாங்கம் மலையக மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஏன் தீர்வு வழங்க தயங்குகின்றது. மலையக மக்களுடைய வீட்டு பிரச்சினை, சம்பள பிரச்சினை போன்றவையை ஏன் இந்த அரசாங்கம் கண்டும் காங்காமல் இருக்கின்றது.

    தொடர்ந்து இந்த அரசாங்கம் மலையக மக்களை அடிமைகளாக வைத்துக் கொள்வதே அவர்களின் நோக்கமாக இருக்கின்றது. இவர்கள் ஆட்சிக்கு வரும் பொழுது மலையக மக்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம், பிரச்சினைகளை தீர்த்து வைப்போம் என பொய்யான பிரச்சாரங்களை முன்வைத்தே இந்த அரசாங்கம் வாக்குகளை பெற்றது. அதேபோல் இந்த அரசாங்கத்தில் இருக்கும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் இவ்வாறான போலியான பிரச்சாரங்களையே முன்னெடுத்தார்கள்.

    அத்தோடு, இந்த நாட்டில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச நல்ல ஒரு நிர்வாகி, அவருடைய நிர்வாக திறமையில் மலையகத்தில் பாலாறும், தேனாறும் பொழிவதாக சொன்னார்கள். ஆனால் இன்று பஞ்சத்தையே மக்கள் எதிர்நோக்குகின்றார்கள். எனவே இந்த அரசாங்கத்தில் நிலைமையை மாற்றி அமைக்க வேண்டும்.

    இந்த அரசாங்கம் மலையக சமூகத்தை கரிசனையோடு, சமூகம் சார்ந்த நல்ல திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

    Category: இலங்கை
    Share12Tweet8Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட மாநாடு ஆரம்பம்!
    Uncategorized

    தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட மாநாடு ஆரம்பம்!

    2022-06-25
    அபிவிருத்திக்கென்று மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் இங்கு எதுவும் நடைபெறவில்லை – மட்டு. மாநகர முதலவர்
    இலங்கை

    அபிவிருத்திக்கென்று மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் இங்கு எதுவும் நடைபெறவில்லை – மட்டு. மாநகர முதலவர்

    2022-06-25
    இலங்கை

    மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது – விசாரணை வேண்டும் என்கின்றார் பேராயர் !

    2022-06-25
    ஹட்டனில் மண்ணெண்ணெய்க்காக மக்கள் போராட்டம்!
    இலங்கை

    ஹட்டனில் மண்ணெண்ணெய்க்காக மக்கள் போராட்டம்!

    2022-06-25
    அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
    இலங்கை

    அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி!

    2022-06-25
    மேல் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகளின் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது
    இலங்கை

    கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறப்பு : நாட்கள் மற்றும் நேரத்தில் மாற்றம்

    2022-06-25
    Next Post
    உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்- கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 63 பேருக்கும் தொடர்ந்து விளக்கமறியல்!

    உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்- கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 63 பேருக்கும் தொடர்ந்து விளக்கமறியல்!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.