• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அதிகரித்துவரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லையால் மக்கள் அவதி!

கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/01
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக, மாகாணம் தழுவிய ரீதியில் மூன்று ஆண்டுகளுக்கான நாய்களுக்கான விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தின் இந்த ஆண்டுக்குரிய செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 7,606 நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமும், உள்ளூராட்சி அமைச்சின் கீழான உள்ளூராட்சித் திணைக்களமும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக இந்த ஆண்டு 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்ட ரீதியாக யாழ். மாநகர சபை – 120 நாய்கள் ஏனைய யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகள் – 5,216 நாய்கள் கிளிநொச்சி மாவட்டம் (கரைச்சி தவிர்ந்த) – 350 நாய்கள் , முல்லைத்தீவு மாவட்டம் – 750 நாய்கள்,வவுனியா மாவட்டம் (மாநகர சபை உள்ளடங்கலாக) – 1,170 நாய்கள் எண்ணிக்கையான நாய்களுக்குக் கருத்தடை செய்யப்படவுள்ளது.

இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக, வவுனியா மாவட்டத்தில் இதுவரை 72 நாய்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவுறுத்தப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, ஏனைய மாவட்டங்களிலும் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, நாளை மறுதினம் திங்கட்கிழமை (03.08.2026) அன்று யாழ்ப்பாண மாநகர சபையிலும், 04.08.2026 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையிலும், 23.08.2026 அன்று வவுனியா மாநகர சபையிலும் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆரம்பக்கட்டக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24.07.2026 அன்று நிறைவடைந்துள்ளதுடன், கிளிநொச்சி மாவட்டத்தில் 03.08.2026 அன்றும், மன்னார் மாவட்டத்தில் 07.08.2026 அன்றும் விசேட கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.

இக்கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, உரிய பொறிமுறைகளின் ஊடாகக் குறித்த மாவட்டங்களிலும் கருத்தடைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

கடந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் முன்னோடித் திட்டமாக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளின் அனுபவங்களைக் கருத்திற்கொண்டும், விலங்கு நல அமைப்புகளின் ஆக்கபூர்வமான சுட்டிக்காட்டல்களை உள்வாங்கியும் இம்முறை இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமைச்சரவை மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய ‘விலங்கு நலச் சட்டத்தின்’ ஏற்பாடுகளுக்கு அமைவாக, விலங்குகளின் உரிமைகள் மற்றும் நலன்களுக்கு அதியுயர் முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

விலங்குகளின் நலனைக் காப்பதன் ஊடாக ஆரோக்கியமானதொரு சமூகத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்துக்கு, அனைத்துப் பொதுமக்களும் உரிய தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கோரியுள்ளார்.

01-1

Related

Tags: north provincesrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு !

Next Post

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதி ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்கப்படும் – இளங்குமரன் எம்.பி திட்டவட்டம்!

Related Posts

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
இலங்கை

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

2026-09-15
எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்
இலங்கை

எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்

2026-09-15
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

மேல் மாகாணபோக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ கைது

2026-09-15
மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்
இலங்கை

மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்

2026-09-15
இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி
இலங்கை

இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

2026-09-15
நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு
அம்பாறை

நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

2026-09-15
Next Post
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதி ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்கப்படும் – இளங்குமரன் எம்.பி திட்டவட்டம்!

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதி ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்கப்படும் - இளங்குமரன் எம்.பி திட்டவட்டம்!

டிரம்ப் முன்மொழிந்த ‘அமைதி சபை’ திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!

டிரம்ப் முன்மொழிந்த 'அமைதி சபை' திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!

மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறையில் அமைதியின்மை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

0
எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்

எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

மேல் மாகாணபோக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ கைது

0
1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

0
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

2026-09-15
எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்

எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்

2026-09-15
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

மேல் மாகாணபோக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ கைது

2026-09-15
1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

2026-09-15
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

2026-09-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.