• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது மனம் கொதிக்கிறது- சஜித்

மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது மனம் கொதிக்கிறது- சஜித்

shagan by shagan
2022/01/08
in இலங்கை, பிரதான செய்திகள்
74 0
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டு மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது உண்மையில் மனம் கொதிக்கிறது.  என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று ( வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு அவர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

மக்களே சிந்தித்து பாருங்கள். மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளைப் பெறுவதற்கு வரிசையில் நிற்கிறார்கள். இன்று குடிக்க பால் மா இல்லை. சமைக்க அரிசி இல்லை. விவசாயிகளுக்கான உரம் இல்லை.

மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது உண்மையில் மனம் கொதிக்கிறது. எந்த நம்பிக்கையில் இப்படியான ஆட்சியாளர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குகிறார்கள். ஆட்சிக்கு வரும் போது என்ன கூறினார்கள்.

தேசிய பாதுகாப்புக்கு உத்தரவாதம். நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம். இலவசமாக பலதையும் தருகிறோம் என்று கூறி இனவாதத்தை தோற்றிவித்து ஆட்சியை கைப்பற்றினார்கள்.

இன்று என்ன நடக்கிறது. உண்மையில் இந்த நாடு பெரிய பாதகமான அழிவை நோக்கி செல்கிறது. இப்படியாக நாடு பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது இந்த நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும்.

எதிர்வரும் எமது ஆட்சியில் எமது மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நாங்கள் தயாராகி வருகின்றோம். இலங்கை ஒரு அபிவிருத்தி பாதையில் செல்ல நாம் நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.

கடந்த 70 வருடமாக எதிர்கட்சி  நாடாளுமன்றத்தில் இருந்து அரசாங்கத்தை விமர்சித்து கொண்டிருந்தது. ஆனால் நாம் அதை மாற்றியமைத்து இருகின்றோம். எதிர்கட்சியாக இருந்தாலும் மக்களது தேவையறிந்து மக்களிடத்தில் செல்கின்றோம்.

கடந்த 30 வருடகால யுத்தத்தில் வடக்கு – கிழக்கு அதிகமாக பாதிப்படைந்திருந்தது. யுத்தம் முடிவடைந்த பின் அந்த பிரதேசம் பாதிப்படைந்திருந்தது. அதனை நாம் கட்டியெழுப்ப  வேண்டும். முடிந்தால் அரசாங்கம் கட்டியெழுப்ப வேண்டும். அல்லது சர்வதேசத்தின் உதவியை நாட வேண்டும். ருவெண்டா நாட்டில் யுத்தம் நடந்தது.

8 இலட்சம் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. யுத்தம் முடிந்த பின் அந்த நாடு கட்டியெழுப்பப்பட்டது. ஆப்கானிஸ்தானிலும் அவ்வாறே நடந்தது. இன்று சர்வதேசத்துடன் தொடர்பு இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் வடக்கு – கிழக்கு கட்டியெழுப்பப்படவில்லை. வெறும் வாய் பேச்சில் இருக்கிறார்கள். எமது அரசாங்கத்தின் ஆட்சி வரும் போது யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கு கிழக்கு பகுதியை கட்டியெழுப்புவோம்.

எம்மால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் அரைகுறையாக இருப்பதாக சிலர் எம்மிடம் கேட்கிறார்கள். கடந்த தேர்தலில் இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இன்னொருவருக்கு தான் அதிகபடியான வாக்குகளை வழங்கி ஆட்சிக் கொண்டு வந்திருந்தார்கள்.

அவர்கள் இந்த நாட்டுக்காக அந்த மக்களுக்காக வீட்டை பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆனால் அதனை செய்யவில்லை. வஞ்சகத் தனம் காணப்பட்டது. எனவே இவர்கள் இந்த நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் ஆட்சி மலரும் போது வீட்டுதிட்ட கனவு நனவாகும்.

மக்கள் எதிர்பார்ப்புடன் வாக்களித்ததார்கள். அதை இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை. இதனை மக்கள் புரிந்து கொண்டு இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னார் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள் திருத்த வேலைகள் ஆரம்பம் – அ.மரின்குமார்

Next Post

மாலைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடி படகு கவிழ்ந்தது – ஐவர் மீட்பு, ஒருவர் மாயம்!

Related Posts

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு
இலங்கை

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

2025-12-23
இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார்  எஸ்.ஜெய்சங்கர்
ஆசிரியர் தெரிவு

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் எஸ்.ஜெய்சங்கர்

2025-12-23
ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!
இலங்கை

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

2025-12-23
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!
இலங்கை

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

2025-12-23
2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!
இங்கிலாந்து

2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!

2025-12-23
இலங்கைக்கான 450 மில்லியன் டொலர் மீள்கட்டமைப்பு தொகுப்பை அறிவித்த இந்தியா!
இலங்கை

இலங்கைக்கான 450 மில்லியன் டொலர் மீள்கட்டமைப்பு தொகுப்பை அறிவித்த இந்தியா!

2025-12-23
Next Post
மீன்பிடி அனுமதி குறித்து பிரான்ஸ் – பிரித்தானியாவிற்கு இடையில் முறுகல்

மாலைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடி படகு கவிழ்ந்தது - ஐவர் மீட்பு, ஒருவர் மாயம்!

லண்டன் மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை!

லண்டன் மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை!

2020 டோக்கியோ ஒலிம்பிக்: பதக்க பட்டியலில் சீனா தொடர்ந்தும் முன்னிலை!

சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப்போவதில்லை - வட கொரியா

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

0
இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார்  எஸ்.ஜெய்சங்கர்

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் எஸ்.ஜெய்சங்கர்

0
ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

0
சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

2025-12-23
இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார்  எஸ்.ஜெய்சங்கர்

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் எஸ்.ஜெய்சங்கர்

2025-12-23
ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

2025-12-23
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

2025-12-23
2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!

2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!

2025-12-23

Recent News

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

2025-12-23
இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார்  எஸ்.ஜெய்சங்கர்

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் எஸ்.ஜெய்சங்கர்

2025-12-23
ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

2025-12-23
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

2025-12-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.