• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

சுற்றுலாத் துறையைத் திட்டமிட்ட வகையில் மேம்படுத்துவதற்கு  நடவடிக்கை!

1.096 Views
7 months ago
76 1
0
Share
Facebook Twitter WhatsApp
    யே.பெனிற்லஸ் யே.பெனிற்லஸ்
    Subscriber

    வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறையைத் திட்டமிட்ட வகையில் மேம்படுத்துவதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும் என, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் ஹெட்டிஆரச்சி தெரிவித்துள்ளார்.

    ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற சுற்றுலாவுக்கு அனுமதி என்ற தொனிப்பொருளிலான ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    இதன்போது கருத்து வெளியிட்ட சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆரச்சி, சுற்றுலாத் துறையின் வரலாறு காணாத வீழ்ச்சிக்கு உலகளாவிய கொரோனா தொற்றுப் பரவல் ஒரு முக்கிய காரணியாக மாறியிருக்கின்றது என்றும் இது, சுற்றுலாத்துறையில் பத்து இலட்சத்துக்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை இழக்கச்செய்யும் அளவுக்கு பலமிக்கதாக இருந்தது என்றும் தெரிவித்தார்.

    அதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்குக் கிடைத்துவந்த பாரிய நிதியை நாடு இழந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    நாட்டுக்கு வெளிநாட்டு நிதி கிடைக்கும் பிரதான மூல காரணிகளில் சுற்றுலாத்துறை மூன்றாவது இடத்தில் காணப்பட்டது.

    ஏனைய நிதி மூலங்களுடன் ஒப்பிடுகையில், சுற்றுலாத்துறையில் இருந்தே நாட்டுக்கு நிகர வருமானம் கிடைத்தது.

    புதிய திட்டங்கள் மற்றும் உத்திகளின்படி, 2030ஆம் ஆண்டளவில் நாடு 07 மில்லியன் சுற்றுலா  பயணிகளின் வசதி மற்றும் முகாமைத்துவத்தை உயர்ந்த மட்டத்தில் பேணுவதற்குத் தேவையான நவீன மென்பொருளை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    அத்துடன், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பொலிஸாரால் நடத்தப்படும் சுற்றுலா பொலிஸ் சேவையைப் புதிய வடிவில் மேற்கொள்வதற்காக அதன் பிரிவுகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதோடு, அதற்கு அனுமதி அளிப்பதற்கான அடிப்படைப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

    மேலும், அதற்கு முன்னர்  சுற்றுலாத் துறையில் ஈடுபட்டிருந்த பலர் கொரோனா தொற்றை அடுத்து அத்துறையில் இருந்து வெளியேறியுள்ளமையானது பாரிய சவாலாகக் காணப்படுவதாகவும் இந்தச் சவாலை முறியடிக்க புதிய தொழில் முயற்சியாளர்களை இத்துறைக்கு ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    அதேநேரம், இலங்கையின் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை தொடர்பாக சர்வதேசத்தில் நிலவுகின்ற நன்மதிப்பை இலங்கையின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது காலத்துக்குப் பொருத்தமானதாகும் என்றும் இதற்கு அனைவரதும்  ஒத்துழைப்பு அவசியம் என்றும் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

    Category: இலங்கை கொழும்பு பிரதான செய்திகள்
    Tags: இலங்கைசுற்றுலாத் துறைஹெட்டிஆரச்சி
    Share13Tweet8Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.4% ஆக குறையும் – ஆசிய அபிவிருத்தி வங்கி
    இலங்கை

    உணவுப் பாதுகாப்பு தொடர்பாக ஆசிய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்

    2022-08-09
    கொரோனா ஒழிப்புக்கான 200 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு
    இலங்கை

    இலஞ்ச ஊழல் வழக்கு: ஜோன்ஸ்டன் வெளிநாடு செல்லத் தடை

    2022-08-09
    ஆயிரம் ரூபா வேதனத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவு!
    இலங்கை

    ஆயிரம் ரூபா வேதனத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவு!

    2022-08-09
    பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வதாக உத்தரவாதம் வழங்கினால் சர்வக்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கத் தயார்- லக்ஷ்மன்
    இலங்கை

    பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வதாக உத்தரவாதம் வழங்கினால் சர்வக்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கத் தயார்- லக்ஷ்மன்

    2022-08-09
    ஜனாதிபதி தெரிவின்போது உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்தபட்டுள்ளனர்- சமிந்த விஜேயஸ்ரீ
    இலங்கை

    ஜனாதிபதி தெரிவின்போது உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்தபட்டுள்ளனர்- சமிந்த விஜேயஸ்ரீ

    2022-08-09
    அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரதன்மை ஏற்படுத்த வேண்டும்-ஜனாதிபதி
    இலங்கை

    அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரதன்மை ஏற்படுத்த வேண்டும்-ஜனாதிபதி

    2022-08-09
    Next Post
    வவுனியா பேருந்து விபத்தில் 13 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் காயம்!

    வவுனியா பேருந்து விபத்தில் 13 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் காயம்!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.