• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நல்லூர் பிரதேச சபையில் சோலைவரியில் விசேட விலைக் கழிப்புக் கொள்கை உருவாக்கம்!

நல்லூர் பிரதேச சபையில் சோலைவரியில் விசேட விலைக் கழிப்புக் கொள்கை உருவாக்கம்!

shagan by shagan
2022/02/11
in இலங்கை
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நல்லூர் பிரதேசத்தில் வாழும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு சோலைவரி அறவீட்டில் கொள்கை அடிப்படையில் விலைக்கழிவு கொடுப்பதற்கு நல்லூர் பிரதேச சபையினால்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு  இன்று (வெள்ளிக்கிழமை) சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்திகள் மறந்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்நிலையில் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உட்பட்ட பகுதிகளின் நிலத்தின் பெறுமானம் புதிதாக அளவீடு செய்யப்பட்டுள்ளமையால் அதற்கேற்ப வருமான வரி அறவீட்டிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையால் வறிய மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது என உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதனடிப்படையில் இது தொடர்பில் முதலில் கொள்கை உருவாக்கம் ஒன்றை உருவாக்குவதற்கான பொறிமுறையை தவிசாளர் சபையில் பிரஸ்தாபித்திருந்தார்.

அதனடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள பகுதியில் வாழும் வறிய மக்களுக்கு சோலைவரி அறவீட்டில் விலைக்கழிப்பு அல்லது பரிகாரம் கொடுப்பது சிறந்தது எனவும் விலைக்கழிப்பு செய்வதால் கொரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதாரத்தில் பின்நிலையில் உள்ள மக்களது நலன்கள் பாதுகாக்கப்படும் சந்தர்பம் வலுவாக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் பிரதேசத்தினை அடிப்படையாக கொண்டு நிலத்தின் பொறுமதி மற்றும் இதர காரணிகளை கொண்டு வரி நிர்ணயிக்கப்படுகின்றது. அந்தவகையில் விலைக் கழிப்புக்கு முன்னர் அது தொடர்பில் ஆராய்ந்து வறிய மக்களது தரவுகளை துல்லியமான ஆராய்ந்து கிராம உத்தியோகத்தரது உறுதிப்படுத்தலுடன் இதை மேற்ிகொள்ள வேண்டும் எனவும் உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது.

இதேநேரம் சபையின் வருமானம் இழக்கப்படாமலும் மக்களின் வாழ்வியலுக்கு ஊக்குவிப்பதற்குமான் திட்டங்களை முன்வைப்பதுதான பிரதேச சபையினது கடடையாகும் எனவும் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் எமது சபையில் இன்றுவரை பல மில்லியன் நிதி அறவிடப்படாது நிலுவையில் உள்ளது. இவற்றை அறவிடுவதற்கான பொறிமுறைகளையும் உருவாக்குவது அவசியம் என்றும் அநேக உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை வரி அறவிடுவதென்பது அந்த பிரதேசத்தில் வாழ்துவரும் மக்களது நிலத்துக்கு அல்லது வாழும் உரிமையை உறுதிப்படுத்துதல் அல்லது அதற்கான அடையாளமாக கொள்ளப்படுகின்றது.

அந்தவகையில் முற்றுமுழுதாக சோலைவரி விலைக்கழிப்பை வழங்காது அந்த மக்களினதும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு சிறு நிதியை அறவிடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் னவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கிணங்க தற்போது நிலப்பொறுமதியின் 8 வீதத்தை வரியாக அறவிடும் நிலை காணப்படுகின்றது. அத்துடன் காலத்துக்கு காலம் அது அதிகரித்தும் செல்கின்றது.  எனவே கொண்டுவரப்படும் திருத்தமானது ஒரு சிறு அறவீட்டுடன் மேற்கொள்ளப்படுவதே சிறந்தது எனவும் உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது.

அந்தவகையில் சபையில் இன்றையதினம் பிரசன்னமாகியிருந்த உறுப்பினர்களின் கருத்தின் அடிப்படையில் தற்போதுள்ள 8 வீத வரி அறவீட்டை இனிவருங்காலத்தில் உறுதிசெய்யப்படும் வறிய மக்களுக்கென கொள்கை ரீதியாக 2 வீதமாக குறைத்து அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நடைமுறை அடுத்தமாதம்முதல் இது கொள்கை உருவாக்க அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பிரதேசத்தில் காணப்படும் திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கும் அவற்றை தரம் பிரிப்பதற்குமான விசேட பொறிமுறையை உருவாக்கவதனூடாகவே அதை மேற்கொள்வதில் வெற்றிபெற முடியும் என உறுப்பினர் ஒருவரால் முன்மொழிவொன்று கொண்டுவரப்பட்டது.

இதற்கிணங்க திண்மக்கழிவு தரம்பிரித்து அகற்றுவதற்காதன பொறிமுறையாக முன்பள்ளிகளில் இருந்து ஆரம்பிப்பது என்றும் சிறுவர்களுக்கு இத்தகைய விழிப்பணர்வுகளை புகட்டுவதனூடாக அதை வெற்றி கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்கும் இடங்களில் இருந்து இந்த விழிபுணர்வுகளை முன்னெடுத்தால் எதிர்காலத்தில் அது வெற்றிபெறும் சாத்தியக்கூறுக்ளும் அதிகமாக காணப்படுகின்றது.

இதன் அடுத்த கட்டமாக முன்பள்ளிகளிலிருந்து பாடசாலைகளுக்கு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் அவசியம் என்றும் .பாடசாலைகளிலும் அந்த நடைமுறையை சுகாதர புத்தியோகத்தர்கள் ஊடாக சபையின் சுகாதார பிரிவினரும் இணைந்து பாடசாலைகளில் நடைமுறைப்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் இவ்வாறு மாணவர்கள் மத்தியில் இந்த திண்ம கழிவகற்றல் மற்றும் வகைப்படுத்தில் பொறிமுறையை முன்னெடுத்துச் சென்றால் அதன் இலக்கை எதிர்காலத்தில் இலகுவாக வெற்றிகொள்ள  முடியும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு – 6 பேர் காயம்!

Next Post

அரச மருந்தகங்கள் ஊடாக இலவசமாக மருந்து விநியோகம்!

Related Posts

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!
இலங்கை

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!
இலங்கை

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!
இலங்கை

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!
இலங்கை

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!
இலங்கை

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2025-12-02
இந்திய கடற்படையின் மகத்தான உதவி!
ஆசிரியர் தெரிவு

பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள நாடுகளின் பட்டியல்!

2025-12-02
Next Post
அரச மருந்தகங்கள் ஊடாக இலவசமாக மருந்து விநியோகம்!

அரச மருந்தகங்கள் ஊடாக இலவசமாக மருந்து விநியோகம்!

யாழ்.மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

யாழ்.மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

வவுனியாவில் வலிந்து காணாமல் போனவர்களின் உறவுகள் போராட்டம்!

வவுனியாவில் வலிந்து காணாமல் போனவர்களின் உறவுகள் போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

0
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

0
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

0
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

0
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

0
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

2025-12-02

Recent News

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.