பெலரஸில் உயர் கல்வியில் ஈடுபடும் இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு குறித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பெலரஸில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் சுமார் 1500 இலங்கை மாணவர்களின் பெற்றோர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த இலங்கை மாணவர்கள் ரஷ்யா அல்லது இலங்கை செல்வதற்கு விசா வழங்குமாறும் பிரதமர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மேலும் கல்வி நடவடிக்கைகளை பல வாரங்களுக்கு ஒத்திவைப்பது குறித்து பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.