இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு இருப்பது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 49 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய, இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன்படி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து இந்திய அணி 170 ஓட்டங்களை குவித்தது. அவ்வணி சார்பாக ரவீந்திர ஜடேஜா அட்டமிழக்காமல் 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதனை அடுத்து 171 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 17 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
இதனால் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருப்பது தொடரை ஒரு போட்டி மீதமிருக்க இந்திய அணி 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.