இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் கடந்த 07ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி 06 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முன்று நாட்கள் கொண்ட பயிற்சி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த பயிற்சி போட்டி கடந்த 07ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றிருந்தது.
நாணயச்சுழற்றியில் வெற்றி பெற்றிருந்த இலங்கை ஓஐ அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தது.
இதன்படி முதலாவது இன்னிங்சில் இலங்கை அணி 363 ஓட்டங்களுக்கு 08 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
இதனை தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்திருந்த இந்திய அணி 357 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 200 ஓட்டங்களுக்கு 06 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இதனால் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 207 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
நேற்றைய மூன்றாம் நாளில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 04 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் மூலம், எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







