கிளிநொச்சி கந்தன் குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கந்தன் குளத்தில் இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மல்லாவி ஐயங்கன் குளத்தைச் சேர்ந்த பகிரதன் சுமன் 21 வயதுடைய இளைஞரே விநாயகபுரம் கந்தன் குளத்தில் இளைஞரின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானின் அனுமதியுடன் சடலத்தினை மீட்கப்பட்டு, உடல் கூறு பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.















