• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை இலங்கைக்கு அழைப்பதற்கு தீர்மானம்!

சுதந்திர தின அரச விழாவின் செலவுகள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை – ஜனாதிபதி அலுவலகம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/02/07
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
70 1
A A
0
46
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

75ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பொருளாதார நெருக்கடி காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் அரச விழாவைப் புறக்கணிக்குமாறு மக்களை கட்டாயப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட போலிப் பிரச்சாரங்கள் குறுகிய அரசியல் செயல்முறையின் மற்றொரு தொடர்ச்சியையே எடுத்துக் காட்டுகிறது.

பொய்யான தகவல்கள் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்தி, அரசாங்கத்தை மக்கள் வெறுக்கச் செய்வதும், அரசாங்கத்தை அசௌகரியப்படுத்துவதன் மூலம் அவர்களின் அரசியல் நலன்களை நிறைவேற்றுவதுமே இதன் நோக்கமாக இருக்க வேண்டும்.

அதற்காக, சுதந்திர தின விழாவின் போது நடமாடும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தி கொடுத்தது கூடத் தவறு என்று மக்களை நம்ப வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், அழைப்பின் பேரில் உயர்மட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகளான ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டக்கி ஷுன்சுகே (Takei Shunsuke), பூட்டானின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் ஜெய் பிர் ராய்  (Jai Bir Rai), மற்றும்  மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் (Abdulla Shahid) பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.  ஏ.கே. அப்துல் மொமன் (A.K. Abdulla Momen) பாகிஸ்தான் வெளிவிவகார இணை அமைச்சர் ஹினா ரப்பானி கர் (Hina Rabbani Khar), இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் வி. முரளீதரன் (V. Muraleedharan), நேபாள வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. பிமலா ராய் பௌத்யால் (Bimala Rai Paudyal), பொதுநலவாயத்தின் பொதுச் செயலாளர் பெட்றீசியா ஸ்கொட்லன்ட் (Patricia Scotland) ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட சுமார் 3200 உயர் அதிகாரிகளும் முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த சுமார் 6670 உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும், சுதந்திர தின விழாவை முன்னிட்டு பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்காக இந்த நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் நிகழ்வில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உரிய முறையில் உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக, போதுமான நடமாடும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை தேவையற்ற செலவு என கூற முடியாது.

அதிகளவான மக்கள் கூடும் உத்தியோகபூர்வ அரச நிகழ்வில் இவ்வாறான ஒரு அம்சம் தொடர்பில் போதிய கவனம் செலுத்தாமை நாட்டுக்கே அவமானம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அத்துடன், கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து 5.8 மில்லியன் ரூபாவை இந்த நிகழ்வுக்காக அரசாங்கம் செலவிட்டுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது.

இந்த நிகழ்விற்கான ஆரம்ப செலவை கல்வி அமைச்சு மதிப்பிட்டிருந்த போதிலும், அந்த பணம் எதுவும் செலவிடப்படவில்லை.

தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் உத்தியோகபூர்வ அரச விழாவிற்கு நிதி ஒதுக்கீடு செய்வது பொதுவானதொரு விடயமாகும். மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற 75ஆவது தேசிய சுதந்திர தின விழாவின் அதிகாரபூர்வ அரச விழாவிற்கு செலவிடப்பட்ட தொகையானது மதிப்பிடப்பட்ட தொகையை விடவும் மிகக் குறைவு என்பதை வலியுறுத்த வேண்டும்.

அதன்படி, இவ்வருடம் நடைபெற்ற 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவிற்கு அரசாங்கம் செலவிட்ட மொத்தத் தொகை 11,130,011 ரூபா 29 சதங்கள் மட்டுமே ஆகும்.

மேலும், கடந்த சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு செலவிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு சுதந்திர தின விழாவுக்காக அரசாங்கம் மிகக்குறைவாகவே செலவிட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் வேளையில் இப்படி ஒரு அரச விழாவை நடத்துவது நாட்டை மீண்டும் எழுச்சி பெறத் தயார் செய்வதாகத் தெரிகிறது.

மறுபுறம், இலங்கையை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு  தேவையான துணிச்சல் இலங்கை அரசிடம் இருப்பதாகவும், நெருக்கடியால் வீழ்ச்சியடைந்த இலங்கையின் பெருமையை மீட்டெடுக்க நாடு தயாராக உள்ளது என்பனவும் இந்நிகழ்வின் மூலம் உலகிற்குச் சொல்லும் செய்திகளாக அமைந்துள்ளன.

எனவே, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தேசிய சுதந்திர தினம் போன்ற பெருமைக்குரிய அரச நிகழ்வு தொடர்பில் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரச்சாரங்களை ஜனாதிபதி அலுவலகம் வருத்தத்துடன் நிராகரிக்கிறது.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: அரச விழாபோலிப் பிரச்சாரங்கள்ஜனாதிபதி அலுவலகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயங்கரவாத தடைச்சட்டம் பிரச்சனைக்குரியது – ஐரோப்பிய ஒன்றியம்

Next Post

13ஆம் திருத்தத்திற்கு மேலன அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் – பௌத்தப்பிக்குகள்

Related Posts

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறையில் முன்னெடுப்பு!
அம்பாறை

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறையில் முன்னெடுப்பு!

2025-05-14
ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!
இலங்கை

ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!

2025-05-13
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது!
இலங்கை

வாழைச்சேனை துறைமுகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

2025-05-13
கட்சியின் எதிர்காலம்  மக்களின் நலன்களுடன் தொடர்புடையதாகவே  இருக்கும்-டக்ளஸ்!
இலங்கை

கட்சியின் எதிர்காலம் மக்களின் நலன்களுடன் தொடர்புடையதாகவே இருக்கும்-டக்ளஸ்!

2025-05-13
வடக்கு, கிழக்கில்  இன்றும் முள்ளிவாய்க்கால் காஞ்சி வழங்கும் நிகழ்வு!
இலங்கை

வடக்கு, கிழக்கில் இன்றும் முள்ளிவாய்க்கால் காஞ்சி வழங்கும் நிகழ்வு!

2025-05-13
பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை!
இலங்கை

பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை!

2025-05-13
Next Post
13ஆம் திருத்தத்திற்கு மேலன அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் – பௌத்தப்பிக்குகள்

13ஆம் திருத்தத்திற்கு மேலன அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் - பௌத்தப்பிக்குகள்

வவுனியா சுற்றுலாமைய குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு ஆளுனர் பணிப்பு!

சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி !

அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட வைத்தியர்கள் தீர்மானம்!

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கம் அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
போப் தேர்வு மாநாடு: சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெளியேறிய கரும்புகை!

போப் தேர்வு மாநாடு: சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெளியேறிய கரும்புகை!

2025-05-08
முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி அம்பாறையில் முன்னெடுப்பு

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி அம்பாறையில் முன்னெடுப்பு

0
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது நியூசிலாந்து

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது நியூசிலாந்து

0
ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!

ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!

0
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது!

வாழைச்சேனை துறைமுகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

0
கட்சியின் எதிர்காலம்  மக்களின் நலன்களுடன் தொடர்புடையதாகவே  இருக்கும்-டக்ளஸ்!

கட்சியின் எதிர்காலம் மக்களின் நலன்களுடன் தொடர்புடையதாகவே இருக்கும்-டக்ளஸ்!

0
முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி அம்பாறையில் முன்னெடுப்பு

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி அம்பாறையில் முன்னெடுப்பு

2025-05-14
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது நியூசிலாந்து

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது நியூசிலாந்து

2025-05-13
ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!

ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!

2025-05-13
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது!

வாழைச்சேனை துறைமுகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

2025-05-13
கட்சியின் எதிர்காலம்  மக்களின் நலன்களுடன் தொடர்புடையதாகவே  இருக்கும்-டக்ளஸ்!

கட்சியின் எதிர்காலம் மக்களின் நலன்களுடன் தொடர்புடையதாகவே இருக்கும்-டக்ளஸ்!

2025-05-13

Recent News

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி அம்பாறையில் முன்னெடுப்பு

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி அம்பாறையில் முன்னெடுப்பு

2025-05-14
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது நியூசிலாந்து

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது நியூசிலாந்து

2025-05-13
ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!

ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!

2025-05-13
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது!

வாழைச்சேனை துறைமுகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

2025-05-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.