நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மாத்தறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் 6,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் மாத்தறையில் மட்டும் 1,697 குடும்பங்களைச் சேர்ந்த 6,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளார் என்றும் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வீடு ஒன்று முழுமையாய்க்க இடிந்துள்ளதுடன் 39 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் கொட்டபொல மற்றும் அத்துரலிய பிரதேசங்கள் கடந்த சில நாட்களாக வெள்ளம் காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.