• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடன் பிரச்சினையும்: சீனாவின் பதிலளிப்பும்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடன் பிரச்சினையும்: சீனாவின் பதிலளிப்பும்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/29
in உலகம்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகெங்கிலும் பொருளாதார நெருக்கடியான சூழல் இருந்தபோதிலும், இலங்கையும், பாகிஸ்தானும் சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ள அதிகப்படியான கடன்களால் மீளமுடியாத நிலைமைக்குள் தொடர்ந்தும் இருந்து வருகின்றன.

கடந்த சில வருடங்களாக பாகிஸ்தானும் இலங்கையும் சீனாவின் பாரிய செல்வாக்கின் கீழ் வந்துள்ளமைக்கு பல சான்றுகள் உள்ள நிலையில் அந்நாடுகள் தங்களை அறியாமலேயே பாரிய கடன் பொறிகளுக்குள் நுழைந்துவிட்டன என்பது பல ஆய்வாளர்களின் கருத்தாகின்றது.

சீனாவின் பாதை மற்றும் மண்டலம் முன்முயற்சியின் பங்காளிகளாக உள்ள இவ்விரு நாடுகளும் உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதற்காக பாரிய கடன்களைப் பெற்றுக்கொண்டுள்ளன.

இதனால் பல கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இப்போது முடங்கும் நிலைமை ஏற்பட்ட நிலையிலிருந்து மீளமுடியாதவொரு சூழல் உருவாகியுள்ளதால் இரு நாடுகளினதும் பொருளாதாரத்தில் பெரும் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் 10 ஆண்டுகளை நிறைவு செய்தபோதும் மேம்பாடுகள் காணப்படவில்லை. சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழிதடம் 2013இல் 45 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான திட்டமிடப்பட்ட முதலீடுகளுடன் ஆரம்பமாகியபோதும், காலப்போக்கில், அது 62 பில்லியனுக்கும் அதிகமாகியதோடு இதில் பாகிஸ்தானும் தனது பங்கிற்கு 25 பில்லியன்களை முதலீடு செய்ய வேண்டிய நிலைமைகள் ஏற்பட்டன.

இதனை அண்மித்து பாகிஸ்தானில் 2018 இல் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை மற்றும் ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை நாட்டின் கடனை உயர்த்தியது. அத்தோடு, அதிகரித்து வரும் பயங்கரவாதச் செலவுகளும் அதிகரித்ததோடு, வெளிநாட்டு முதலீடுகளும் குறைவாக இருந்தமையால் அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி கண்டது.

இதனால், பாகிஸ்தான் சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து 700 மில்லியன் டொலர் கடனைப் பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அத்தோடு, பாகிஸ்தானின் மொத்த வெளிநாட்டுக் கடனில் சீனாவின் தொகை 30சதவீதமாக உயர்ந்தது. மேலும் சீன வங்கிகளிடம் இருந்து பாகிஸ்தான் 5.5 முதல் 6சதவீதமான வட்டிக்கு கடன் வாங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனால் 2021-2022 நிதியாண்டில், பாகிஸ்தான் 4.5பில்லியன் டொலர்கள் பெறுமதியான சீன வர்த்தக நிதி வசதியைப் பயன்படுத்தியதற்காக சுமார் 150 மில்லியன் டொலர்களை வட்டியாகச் செலுத்தியது. எனவே, சீனாவின் புதிய கடன் பாகிஸ்தானின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் நிலைமையே காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், இந்தியாவின் துணையுடன் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன்வசதியான 2.9பில்லியன் டொலர்களை பெறுவதற்கான உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ள இலங்கை தற்போது உடன்பாடுகளை அமுலாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.

நீடிக்கப்பட்ட கடன்வசதியின் இரண்டாவது தொகையைப் பெறுவதற்கான மீளாய்வுகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் தற்போது வரையில் முக்கிய விடயமான உள்நாட்டு, வெளிநாட்டு கடன்மறுசீரமைப்பு மேற்கொள்ள முடியாது இலங்கை சிக்கித் தவிக்கின்றது.

குறிப்பாக, வெளிநாட்டு கடன்மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியா, யப்பான், பாரிஸ் கிளப் உள்ளிட்ட தரப்புக்கள் பொதுத்தளத்தில் இணைந்து கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான அழைப்பினை விடுத்துள்ள போதும் தற்போது வரையில் சீனா அதற்கு தயாராக இல்லாத நிலைமையே நீடிக்கின்றது.

இந்தக் காரணத்தினால் இலங்கையின் வெளிநாட்டு கடன்மறுசீரமைப்பு விடயம் தொடர்ச்சியாக காலதாமதப்படுத்தப்பட்டு வருவதோடு, பல்வேறு வாய்ப்புக்களும் இழக்கப்பட்டு வருகின்றன.

எனவே, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் எதிர்கால மீட்சிக்கு தற்போது பொறுப்புச்சொல்ல வேண்டிய நிலையில் சீனா உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிரடித் தடை விதித்த இந்தியா; அதிர்ச்சியில் உலக நாடுகள்

Next Post

உலகின் மிகச்சிறிய ஓவியத்தை உருவாக்கிய முடாசிர்

Related Posts

ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே தீவிரமடையும் இராஜதந்திர மோதல் !
உலகம்

ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே தீவிரமடையும் இராஜதந்திர மோதல் !

2025-12-05
30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத் தடையை விரிவுபடுத்தும் அமெரிக்கா!
அமொிக்கா

30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத் தடையை விரிவுபடுத்தும் அமெரிக்கா!

2025-12-05
இங்கிலாந்து முழுவதும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு !
இங்கிலாந்து

இங்கிலாந்து முழுவதும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு !

2025-12-05
ஆளும் தொழிலாளர் கட்சி மக்கள் செல்வாக்கை இழந்து வருவதாக ஆய்வில் தகவல்!
இங்கிலாந்து

ஆளும் தொழிலாளர் கட்சி மக்கள் செல்வாக்கை இழந்து வருவதாக ஆய்வில் தகவல்!

2025-12-05
60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!
இங்கிலாந்து

60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

2025-12-05
ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

2025-12-05
Next Post
உலகின் மிகச்சிறிய ஓவியத்தை உருவாக்கிய முடாசிர்

உலகின் மிகச்சிறிய ஓவியத்தை உருவாக்கிய முடாசிர்

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண் மரணம்

யாழில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு!

இன்று முதல் சதோச மற்றும் பல்பொருள் அங்காடிகளில் முட்டையின் விலை 35 ரூபாய் !

அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகள் இறக்குமதி

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது: இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!

உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது: இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!

0
டித்வா சூறாவளியினால் உயிரிழந்த பொதுமக்களுக்கு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அஞ்சலி!

டித்வா சூறாவளியினால் உயிரிழந்த பொதுமக்களுக்கு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அஞ்சலி!

0
‘சாகர் பந்து’ நடவடிக்கையின் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்!

‘சாகர் பந்து’ நடவடிக்கையின் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்!

0
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

உலக தரத்தில் யாழ் சர்வதேச சதுரங்க போட்டியின் திறப்பு விழாவின் அழகான தருணங்கள்.

0
புத்தளம் மார்க்கமூடான ரயில் சேவை தொடர்பான அப்டேட்!

புத்தளம் மார்க்கமூடான ரயில் சேவை தொடர்பான அப்டேட்!

0
உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது: இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!

உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது: இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!

2025-12-05
டித்வா சூறாவளியினால் உயிரிழந்த பொதுமக்களுக்கு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அஞ்சலி!

டித்வா சூறாவளியினால் உயிரிழந்த பொதுமக்களுக்கு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அஞ்சலி!

2025-12-05
‘சாகர் பந்து’ நடவடிக்கையின் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்!

‘சாகர் பந்து’ நடவடிக்கையின் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்!

2025-12-05
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

உலக தரத்தில் யாழ் சர்வதேச சதுரங்க போட்டியின் திறப்பு விழாவின் அழகான தருணங்கள்.

2025-12-05
புத்தளம் மார்க்கமூடான ரயில் சேவை தொடர்பான அப்டேட்!

புத்தளம் மார்க்கமூடான ரயில் சேவை தொடர்பான அப்டேட்!

2025-12-05

Recent News

உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது: இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!

உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது: இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!

2025-12-05
டித்வா சூறாவளியினால் உயிரிழந்த பொதுமக்களுக்கு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அஞ்சலி!

டித்வா சூறாவளியினால் உயிரிழந்த பொதுமக்களுக்கு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அஞ்சலி!

2025-12-05
‘சாகர் பந்து’ நடவடிக்கையின் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்!

‘சாகர் பந்து’ நடவடிக்கையின் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்!

2025-12-05
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

உலக தரத்தில் யாழ் சர்வதேச சதுரங்க போட்டியின் திறப்பு விழாவின் அழகான தருணங்கள்.

2025-12-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.