• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
டெல்லியின் முதல் மந்திரியாக ரேகா குப்தா பதவியேற்பு

டெல்லியின் முதல் மந்திரியாக ரேகா குப்தா பதவியேற்பு

Kavipriya S by Kavipriya S
2025/02/20
in இந்தியா, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை தெரிவித்தன. அதன்படி பாரதிய ஜனதா 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தது.

இந்த வரலாற்று வெற்றி மூலம் பா.ஜ.க தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். இதையடுத்து டெல்லியின் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய, கட்சியின் மாநில தலைவரான வீரேந்த்திர சச்தேவா மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

முதல்-மந்திரி பட்டியலில் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சர்மா, ரேகா குப்தா, முன்னாள் முதல்-மந்திரி சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் எம்.பி. ஆகியோர் உள்பட பல்வேறு பெயர்கள் இருந்தது. இதனிடையே பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு சென்றதால் அவர் வந்த பின்னர் புதிய முதல்-மந்திரி பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது.

பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தை முடித்து விட்டு டெல்லி திரும்பியதும் டெல்லி மாநில தலைவர்கள் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவரான மத்திய மந்திரி ஜே.பி.நட்டா ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.

புதிய முதல்-மந்திரி குறித்து நேற்று முன்தினமும் கட்சி மேலிடத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே புதிய அரசு பதவி ஏற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும், டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்து வந்தது.

கட்சி தலைமை முடிவின்படி, மேலிட பார்வையாளர்களான ரவிசங்கர் பிரசாத், ஓ.பி.தங்கர் ஆகியோர் முன்னிலையில், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் 48 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா உள்ளிட்ட சில மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் டெல்லி மாநில சட்டசபை கட்சி தலைவராகவும், முதல்-மந்திரியாகவும் ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டார்.

50 வயதாகும் ரேகா குப்தா, ஷாலிமார் பார்க் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பந்தனா குமாரியை சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

கல்லூரி பருவத்தில் இருந்தே அரசியலில் அதிக ஈடுபாடு கொண்ட ரேகா குப்தா, டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகி தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் பா.ஜனதா கட்சியில் சேர்ந்த அவர் 3 முறை மாநகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2022-ம் ஆண்டு டெல்லி மேயர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பா.ஜ.க கட்சியில் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஷாலிமார் பார்க் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். தனது முதல் வெற்றியிலேயே முதல்-மந்திரியாகவும் தேர்வாகி உள்ளார். இதனைத்தொடர்ந்து துணை நிலை கவர்னர் சக்சேனாவை சந்தித்து பா.ஜ.க. சார்பில் ஆட்சியமைக்க ரேகா குப்தா உரிமை கோரினார்.

இந்நிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி முதல் மந்திரியாக ரேகா குப்தா பதவியேற்றார். அவருக்கு டெல்லி துணை நிலை கவர்னர் சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல் மந்திரியுடன் 6 மந்திரிகளும் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, , ராம்லீலா மைதானத்தில் தனது பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக, காஷ்மீரி கேட்டில் உள்ள ஸ்ரீ மார்கட் வாலே ஹனுமான் பாபா கோவிலுக்கு ரேகா குப்தா சென்று வழிபட்டார். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை எனது அரசாங்கம் நிறைவேற்றும். மாதாந்திர உதவியின் முதல் தவணை மார்ச் 8 ஆம் தேதிக்குள் தகுதியான பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே எங்களது முதன்மையான முன்னுரிமை ஆகும்.

பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நிறைவேற்றுவது 48 பாஜக எம்எல்ஏக்களின் பொறுப்பாகும். பெண்களுக்கு நிதி உதவி உட்பட எங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம். மார்ச் 8 ஆம் தேதிக்குள் தகுதியுடைய பெண்கள் தங்கள் வங்கி கணக்குகளில் 100 சதவீதம் உதவித்தொகையை பெறுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘பராசக்தி’ திரைப்படத்தில் இணைந்த பிரித்வி பாண்டியராஜன்!

Next Post

டெல்டா விமான விபத்து; பயணிகளுக்கு $30,000 இழப்பீடு!

Related Posts

சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்
இலங்கை

சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

2025-12-19
திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்
இந்தியா

திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்

2025-12-19
காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் மாற்றங்கள் – ஜீவன் அறிவிப்பு
இலங்கை

காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் மாற்றங்கள் – ஜீவன் அறிவிப்பு

2025-12-19
பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!
இந்தியா

பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!

2025-12-19
நாம் தமிழர் கட்சியின்  தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு
இந்தியா

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

2025-12-19
டி20 உலகக் கிண்ணம்: இலங்கை அணியை வழிநடத்த தயாராகும் தசூன் ஷானக்க!
கிரிக்கெட்

டி20 உலகக் கிண்ணம்: இலங்கை அணியை வழிநடத்த தயாராகும் தசூன் ஷானக்க!

2025-12-19
Next Post
டெல்டா விமான விபத்து; பயணிகளுக்கு $30,000 இழப்பீடு!

டெல்டா விமான விபத்து; பயணிகளுக்கு $30,000 இழப்பீடு!

திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!

திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!

குழந்தை இன்மை சிகிச்சைக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

குழந்தை இன்மை சிகிச்சைக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 4.2 பில்லியன் ரூபா நிதி உதவி!

0
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

0
சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

0
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 4.2 பில்லியன் ரூபா நிதி உதவி!

2025-12-19
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

2025-12-19
சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

2025-12-19
திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்

திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்

2025-12-19
காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் மாற்றங்கள் – ஜீவன் அறிவிப்பு

காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் மாற்றங்கள் – ஜீவன் அறிவிப்பு

2025-12-19

Recent News

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 4.2 பில்லியன் ரூபா நிதி உதவி!

2025-12-19
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

2025-12-19
சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

2025-12-19
திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்

திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்

2025-12-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.