கவுதம் கம்பீர் தலைமையிலான இந்திய தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சிக் குழுவிலிருந்து துடுப்பாட்ட பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மற்றும் களத்தடுப்பு பயிற்சியாளர் டி. திலீப் ஆகியோரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நீக்கியுள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற போர்டர்-கவாஸ்கர் கிண்ணத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் அவமானகரமான தோல்வியைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட குறித்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த மூன்று மாதங்களுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர அணியின் துணை ஊழியர்களில் பலரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, புதிய தோற்றமுடைய துணை ஊழியர்கள் இந்திய அணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் அடுத்த சவால், சொந்த ஊரில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக வருகிறது.