பொதுமக்களிடையே அரசியல் கல்வியறிவை அதிகரிக்கும் முயற்சியில், பாடசாலை பாடத் திட்டத்தில் தேர்தல் பாடங்களைச் இணைப்பதற்கு தேசிய தேர்தல் ஆணையகம் கல்வி அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.
அதன்படி, தரம் 08 பாடத்திட்டத்தில் தேர்தல் கல்விகளை இணைக்க திட்டங்கள் நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
அரச கல்வி முறையில் சிவில் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து போதுமான கவனம் செலுத்தப்படாததால், முறையான கல்வி மூலம் அரசியல் கல்வியறிவு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
‘இலங்கையில் அரசியல் எழுத்தறிவு மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் அதன் தாக்கம்’ என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பட்டார்.