ஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கும் கேரளாவைச் சேர்ந்த தாதியர் நிமிஷா பிரியாவின் (Nimisha Priya) மரணதண்டனை நிறைவேற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
2017 ஆம் ஆண்டு ஏமனில் தன்னை துன்புறுத்திய ஒருவரை கொலை செய்ததற்காக நிமிஷா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
ஜூலை 16 ஆம் திகதி (நாளை) அவருக்கு மரணதண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அவரைக் காப்பாற்ற தீவிர இராஜதந்திர மற்றும் மனிதாபிமான முயற்சிகள் நடந்து வருகின்றன.
தற்போது தலைநகர் சனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிமிஷாவின் வழக்கு, ஏமனில் இந்தியாவின் இராஜதந்திர பிரசன்னம் இல்லாததாலும், ஆளும் அதிகாரிகளை அங்கீகரிக்காததாலும் மேலும் சிக்கலாகியுள்ளது.
இதனிடையே, கேரள தாதியரை காப்பாற்ற முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாக மத்திய அரசு திங்களன்று (14) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

















