இலங்கையின் தலைநகரான கொழும்புக்கு எதிர்வரும் ஒக்டோபர் 26 முதல் வணிக விமானங்களை மீண்டும் இயக்குவதாக குவைத் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
அதன்படி, குவைத்தின் தேசிய விமான நிறுவனம் ஞாயிறு, புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாராந்திர நான்கு விமானங்களை இயக்கும்.
கொழும்பு அதன் பயணிகளுக்கு ஒரு முக்கியமான சுற்றுலா தலமாக உள்ளது என்றும், விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான முடிவு வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்வதற்கும் பரந்த அளவிலான உலகளாவிய பயண விருப்பங்களை வழங்குவதற்கும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் குவைத் ஏர்வேஸ், பயணிகளின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் இடங்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு மேலதிக தேர்வுகள் மற்றும் மேம்பட்ட இணைப்பை வழங்குவதன் மூலம் அதன் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கான தனது ஆர்வத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது.
1953 ஆம் ஆண்டு குவைத் நேஷனல் ஏர்வேஸ் லிமிடெட் என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், 1954 மார்சில் செயல்பாடுகளைத் தொடங்கியது.
குவைத் அரசாங்கம் 1962 ஆம் ஆண்டு விமான நிறுவனத்தின் முழு உரிமையையும் பெற்று, அதை நாட்டின் தேசிய விமான நிறுவனமாக மாற்றியது.


















