டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளை தீவு நாடு தொடர்ந்து எதிர்த்துப் போராடி வரும் நிலையில், சீனா இலங்கைக்கு அவசர உதவியாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் ஒரு சமூக ஊடகப் பதிவில், சீன செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு 100,000 அமெரிக்க டொலர் அவசரகால ரொக்க உதவியை வழங்கியுள்ளதாகக் கூறியது.
ரொக்க நன்கொடைக்கு மேலதிகமாக மேலும் 10 மில்லியன் சீன யுவான் பெறுமதியான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு வழங்க உறுதியளித்துள்ளதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சீன மக்கள் இலங்கையுடன் உறுதியாக நிற்கிறார்கள் என்பதை இந்த உறுதிமொழி மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கான அவசர உதவிகள் குறித்து பேச்சுக்கள் நடைபெற்று வருவதாக அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் திங்களன்று (01) செய்தி வெளியிட்டிருந்தது.












