2025 மற்றும் 2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள், எதிர்வரும் ஒகஸ்ட் மாத ஆரம்பத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர், பேராசிரியர் வசந்த லியனகே இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், இம்முறை மொத்தம் 92,043 மாணவர்கள் அரச பல்கலைக்கழக பிரவேசத்திற்காக விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில் 42,937 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு தெரிவு செய்யப்படும் புதிய மாணவர்கள், ஒகஸ்ட் மாதத்தின் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வாரங்களுக்குள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் பேராசிரியர் வசந்த லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.















