அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை அமெரிக்கா மீறினால், அதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அசிசி (Ebrahim Azizi) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரானின் உறுதியான நிலைப்பாடு காரணமாகவே அமெரிக்கா தங்களது நிபந்தனைகளுக்கு உடன்பட்டு பேச்சுவார்த்தைக்கு வந்ததாக அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது லெபனானுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலமும், இந்த உடன்படிக்கையின் ஒவ்வொரு சரத்தையும் முழுமையாகப் பின்பற்றுவதன் மூலமும் வொஷிங்டன் தனது அர்ப்பணிப்பை நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஈரானியர்களுக்கு எதிராகத் தன்னிச்சையான திணிப்புகளைச் செய்யும் காலம் இனி முடிந்துவிட்டது எனவும் இப்ராஹிம் அசிசி சுட்டிக்காட்டியுள்ளார்.














