இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, லண்டன், ஈஸ்ட் ஆங்லியா (East Anglia), தேம்ஸ் பள்ளத்தாக்கு (Thames Valley), வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் (West Midlands) உட்பட 7 முக்கிய பிராந்தியங்கள் தற்போது கடுமையான வறட்சி நிலையை எதிர்கொண்டு வருகின்றன.
குளிர்காலத்தில் போதுமான மழை பதிவாகியிருந்த போதிலும், கோடைகாலத்தில் எதிர்பார்க்கப்பட்ட மழை அளவில் சுமார் 7 சதவீதம் மட்டுமே பெய்துள்ளதால், ஜூலை மாதம் மிக வறண்ட மாதங்களில் ஒன்றாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இத்தகைய கோடை கால வறட்சி ஏற்பட்டுள்ளதால், நீர்நிலைகளின் மட்டம் குறைந்து விவசாயம் மற்றும் இயற்கை வளங்களுக்குப் பாரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொதுமக்கள் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு நீர்வள உள்கட்டமைப்புகளில் அரசாங்கம் உடனடி முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.















