மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அனுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
காற்று:
காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ ஆக இருக்கும்.
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும், காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தக் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படையினரும் மீனவர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலும், கற்பிட்டி முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். மேற்கூறிய கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களும் கடற்படையினரும் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடலின் நிலை:
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும், காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையிலும் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலும், கற்பிட்டி முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
மன்னார் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் அலையின் உயரம் சுமார் 2.5 – 3.0 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.













