முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று (31) வழங்கப்படவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த முன்கூட்டியே உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தும் அவற்றைத் தடுக்கத் தவறியதன் மூலம் கடமையில் குற்றவியல் ரீதியான அலட்சியம் காட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இதற்கான தீர்ப்பை வழங்கும்.
இந்த இருவர் மீதான வழக்கு விசாரணை அண்மையில் நிறைவடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.












