பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு நேற்று கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பேலியகொடை மீன் சந்தைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 225 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














