அமெரிக்காவில் நிலவும் பனியுடன் கூடிய வானிலை காரணமாக சுமார் 1200 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் வானிலை அமைப்பு வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மிகக் கடுமையான தாக்கங்கள் கடலோரப் பகுதிகளில் உணரப்படும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய குளிர்கால வானிலை அமெரிக்க மின் கட்டமைப்புகளில் குறிப்பாக கரோலினாஸில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கின் சில பகுதிகளில் மின் தடைகள் தொடர்ந்ததாகவும், அங்கு முந்தைய புயலால் ஏற்பட்ட சேதத்தில் மின் கம்பங்கள் விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பல மாநிலங்களில் கிட்டத்தட்ட 178, 000 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரம் இன்றி தவித்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
















