வரலாற்றுப்புகழ் மிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசிமக மகோற்சவ பஞ்சரத பவனி திருவிழா இன்று இடம்பெற்றது
காலை 8.00 மணிக்கு மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளுடன் கூடிய கொடிச்சீலை ஊர்வலம் மாத்தளை நகர்வலம் வந்து, மு.ப 11.00 மணியளவில் தேஸ்தான பிரதம குருக்கள் சிவஸ்ரீசு.மணி.கிருஷ்ணகுமார குருக்கள் தலைமையில் கொடித்தம்ப பூஜை, கொடியேற்றம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன.












