பிரித்தானியாவில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் மீது கொ*லை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்கிழக்கு லண்டன் பகுதியில் வசித்து வந்த இஷையா ஹென்றி ( Isiayah Henry ) என்ற 3 வயது சிறுவன், கடந்த ஜனவரி 3ஆம் திகதி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுவனின் காயங்களின் தன்மை குறித்து சந்தேகம் எழுந்ததால், மருத்துவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்தனர்.
சிறுவனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டபோதிலும், ஜனவரி 19ஆம் திகதி அச்சிறுவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
சிறுவனின் மரணத்திற்குப் பின்னர், வழக்கு கொ*லை குற்றவியல் விசாரணையாக மாற்றப்பட்டது. விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை அடையாளம் கண்டுள்ளனர்.
வுல்விச் (Woolwich) பகுதியை சேர்ந்த 28 வயதுடைய தனிஷா ஹென்றி மற்றும் சவுத்வார்க் (Southwark ) பகுதியை சேர்ந்த 30 வயதுடைய மைக்கேல் வில்லியம்ஸ் ஆகியோரின் மீது கொ*லை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வுல்விச் கிரவுன் (Woolwich Crown ) நீதிமன்றத்தில் ஏப்ரல் 22ஆம் திகதி நடைபெற உள்ளது.
சிறுவன் உயிரிழந்த சம்பவம் உள்ளூர் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

















