வாகன இலக்கத் தகடுகள் மீண்டும் அச்சிடும் பணிகளை தொடங்குவதற்காக போக்குவரத்து அமைச்சு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் இணைந்து இன்று (10) ஒரு புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையளர், போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் பணிப்பளர்கள் குழு ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி நிறுவனம் மூன்று மாதங்களுக்குள் வகான இலக்கத் தகடுகளை அச்சிடத் தொடங்க வேண்டும் என்று இந்த நிகழ்வில் உரையாற்றிய மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையளர் ஜெனரல் கமல் அமரசிங்க குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தத்தைத் தயாரிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்ததாகவும், இது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, சட்டமா அதிபரின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டுதலைப் பெற்ற பின்னர் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்த திட்டம் சுமார் 3 பில்லியன் ரூபா பெறுமதியானது, இன்று முதல் ஐந்து ஆண்டு காலத்திற்கு குறித்த நிறுவனத்திற்கு இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.













