ரஷ்யாவின் 12 பிராந்தியங்கள், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமிய தீபகற்பம், கருங்கடல் மற்றும் அசோவ் (Azov) கடல் ஆகிய பகுதிகள் மீது வியாழன் இரவு முழுவதும் நடத்தப்பட்ட 660 உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்களை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக மொஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சு இன்று (25) தெரிவித்தது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரேன் மீது மொஸ்கோ முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, ரஷ்யப் பகுதிகள் மற்றும் சட்டவிரோதமாக இணைத்துக்கொள்ளப்பட்ட கிரீமியா மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது.
உக்ரேனின் இந்த இரவுநேர ஆளில்லா விமானத் தாக்குதல்களில் ஏற்பட்ட சேத விவரங்களை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு இன்னும் வெளியிடவில்லை.
ரஷ்யாவின் நீண்டகாலப் போர் உத்தியை முறியடிக்கும் முயற்சியாக, உக்ரேனின் நீண்ட தூரம் பாயும் ட்ரோன்கள் பல மாதங்களாக ரஷ்யாவின் எல்லைக் கோட்டிற்கு அப்பாலும், அந்நாட்டின் ஆழமான பகுதிகளிலும் உள்ள எண்ணெய் உற்பத்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் உள்ளிட்ட இலக்குகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இத்தாக்குதல் நடவடிக்கைகள் ரஷ்யாவின் எரிபொருள் மற்றும் இராணுவத் தளவாட விநியோகத்தைத் தடுத்து நிறுத்தி, போர்க்களத்தில் ரஷ்யாவின் முயற்சிகளை முடக்கியுள்ளதாகவும், அதேவேளையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மேற்கத்திய அதிகாரிகளும் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர்.















