• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
உள்ளூராட்சி தேர்தலிலும் நல்லாட்சி மலர தி.மு.க.விற்கு ஆதரவு தாருங்கள்- மக்களிடம் முதல்வர் கோரிக்கை

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை ஏலம் விடுவதைத் தடுக்க வேண்டும்: மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

Dhackshala by Dhackshala
2022/01/26
in இந்தியா, இலங்கை, தமிழகம்
76 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அரசாங்கம் கைப்பற்றிய படகுகளை ஏலம் விடுவதைத் தடுத்து நிறுத்தவும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தவும் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ள ஸ்டாலின், தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட 105 மீன்பிடி படகுகளை ஏலம் விடுவது குறித்தும், ஜனவரி 23ம் திகதி இலங்கை நாட்டினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது குறித்தும் கேள்வி எழுப்பியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கடிதத்தில், “இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 105 மீன்பிடிப் படகுகளை மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை வருகிற 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை ஏலத்தில் விடுவதற்கு முயற்சி செய்வதாக வந்துள்ள செய்தி கவலையையும் வேதனையையும் அளிக்கிறது.

இந்திய-இலங்கை கூட்டு பணிக்குழுவானது மீன்பிடித்தல் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவிருக்கும் சூழ்நிலையில், இந்த ஏலம் விடுவதற்கான அறிவிப்பு துரதிருஷ்டவசமானது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண முன்வந்துள்ள தமிழக மீனவர்கள் மத்தியில் இலங்கை அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள மீட்க இயலாத 125 தமிழக மீன்பிடி படகுகளை அப்புறப்படுத்துவதற்கான செயல்முறை மற்றும் வழிமுறைகளை இறுதி செய்வதற்கு ஒரு தொழில்நுட்பக்குழுவை இலங்கைக்கு அனுப்புமாறு மத்திய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தமிழக அரசை கேட்டுக்கொண்டது.

அதன் அடிப்படையில் மீன்பிடி படகுகளை ஆய்வு செய்து அப்புறப்படுத்துவதை மேற்பார்வையிடவும் விற்பனை வருவாயை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவும் தமிழகத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் கொள்முதல் செய்வோரை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அவர்களின் இலங்கை பயண விபரங்களையும் மத்திய வெளியுறவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சாதகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை, இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக மீன்பிடிப்படகுகளை ஏலம் விடுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதற்கு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்துள்ளதாக இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

இலங்கை அரசு முறையாக கலந்தாலோசனை மேற்கொள்ளாமல் ஏலத்தை நடத்த அவசரம் காட்டுவது, வாழ்வாதாரத்தை இழந்த தமிழக ஏழை மீனவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் இந்திய தூதரகமும் தமிழக அரசும் மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாதிக்கும்.

மேலும் இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டு பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் மீன்பிடிப்படகுகள் அனைத்தும் இலங்கையில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களால் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றியே விடுவிக்கப்பட்டுள்ளன.

தமிழக மீனவர்களின் படகுகளை எவ்வித சட்டப்பூர்வமான உரிமையும் இல்லாத இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை ஏலம்விட உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தை திரும்பப்பெறவும் இந்திய அரசின் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை கொண்டு இலங்கை அரசுக்கு இந்திய அரசின் மறுப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

இந்த சூழ்நிலையில், 2018-ம் ஆண்டுக்கு முன் கைப்பற்றப்பட்ட மற்றும் பழுது பார்க்க இயலாதென கருதப்படும் 125 தமிழக படகுகளை ஒளிவு மறைவற்ற வெளிப்படைத்தன்மையுடன் அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடர வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் 2018-ம் ஆண்டுக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை முன்கூட்டியே விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு இந்த விடயத்தில் உடனடியாக தலையிட வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

Related

Tags: தமிழக மீனவர்கள்மு.க.ஸ்டாலின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கண்டியில் இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம்!

Next Post

தடுப்பூசி தகுதி அடிப்படையில் எல்லைக் கட்டுப்பாடுகளை உருவாக்க முயற்சி

Related Posts

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்
இலங்கை

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

2026-06-18
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

2026-06-18
ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்
இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

2026-06-18
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!
இலங்கை

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

2026-06-18
2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!
இலங்கை

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

2026-06-18
22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!
இலங்கை

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

2026-06-18
Next Post
பிலியந்தலை ஆடைத் தொழிற்சாலையொன்றில் 6 பேருக்கு டெல்டா!

தடுப்பூசி தகுதி அடிப்படையில் எல்லைக் கட்டுப்பாடுகளை உருவாக்க முயற்சி

மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு!

மொனராகலையில் கோர விபத்து: வயோதிபப் பெண் உயிரிழப்பு - அறுவர் காயம்!

இலங்கை அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக ருமேஸ் ரத்னாயக்க நியமனம்!

இலங்கை அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக ருமேஸ் ரத்னாயக்க நியமனம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

0
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

0
ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

0
அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

0
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

0
கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

2026-06-18
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

2026-06-18
ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

2026-06-18
அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

2026-06-18
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

2026-06-18

Recent News

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

2026-06-18
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

2026-06-18
ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

2026-06-18
அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

2026-06-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.