• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

அரசாங்கங்களோடு இணைந்து செயல்பட்டதனாலேயே மலையகத்தை முன்னேற்ற முடிந்தது – கணபதி கனகராஜ்

986 Views
3 years ago
68 1
0
Share
Facebook Twitter WhatsApp
    shagan shagan
    0 Subscriber

    இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கங்களோடு இணைந்து செயல்பட்டதனால் மலையகதில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடிந்தது என  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், ஜனாதிபதியின் செயலணியின் கல்வி அபிவிருத்தி உறுப்பினருமான கணபதி கனகராஜ்  தெரிவித்துள்ளார்.

    இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தோடு இணைந்து செயல்படுவது தொடர்பாகவும், அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்று இருப்பது தொடர்பாகவும் சிலர் விமர்சனங்களை முன்வைத்து  வருகின்றனர் இந்த விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்தி குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் “மலையக மக்கள் இலங்கையில் உரிமைகள் பறிக்கப்பட்ட ஒரு ஒதுக்கப்பட்ட இனமாக இருந்த நிலையை மாற்றி அமைத்தது இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சாணக்கியமான அணுகுமுறையினாலாகும். காலத்துக்கு காலம் இருக்கின்ற அரசாங்கங்களோடு இணைந்து செயல்பட்டதனால் பறிக்கப்பட்ட பிரஜா உரிமை மீட்டெடுக்க முடிந்தது. எல்லோருக்கும் இலவச கல்வி என்ற நிலை இருந்தபோது அது மலையக மாணவர்களுக்கு மட்டும் மறுக்கப்பட்டது. மலையகத் தோட்ட பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று நடத்துவதற்கும், சீடா செயல் திட்டம் ஜிடிசெட் ஆகியவற்றின் நிதி உதவியோடு பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கும்

    அப்போதைய அரசாங்கத்தோடு இணைந்து செயல்பட்டதுதான் காரணமாகும். இதே போல  ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஸ்ரீ பாத கல்வியல் கல்லூரி, தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம் என்பவற்றுடன்  தோட்ட பாடசாலைகளுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளும்  மலையகத்துக்கு வந்து கிடைத்தன. கல்வித் துறை மட்டுமல்லாமல் இலங்கை பொலிஸ் சேவையிலும், சமூர்த்தி உத்தியோகத்தற்களாக கிராம உத்தியோகத்தர்களாகவும்  பல்வேறு அரச துறைகளில் மலையகத் தமிழர்கள் உள் நுழைவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக் கொண்ட அமைச்சு பதவிகலே காரணமாக இருந்தன.

    நாட்டின் பொருளாதார சூழ்நிலை காரணமாக மக்கள் கொதித்தெழுந்தபோது மக்களின் உணர்வுகளை மதித்து எமது பொது செயலாளர்  ஜீவன் தொண்டைமான் தான் வகித்த ராஜாங்க பதவியில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் எமது மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எதிர்க்கட்சிகள் கூட அமைச்சரவை அந்தஸ்துடன் கூடிய அமைச்சுப் பொறுப்பை ஜீவன் பொறுப்பேற்க வேண்டும்.  என்ற கருத்தை முன் வைத்திருந்தன. தற்போது அமைச்சராக ஜீவன் தொண்டமான் பொறுப்பேற்றவுடன் இந்திய வீடமைப்பு திட்டத்தை தொடர்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல தேங்கி கிடந்த பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து இருக்கின்றன. மலையக பல்கலைக்கழகத் தொடர்பான முன்னெடுப்புகள் தற்போது மீண்டும்  ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

    இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயற்பாடுகள் அனைத்தும் காங்கிரஸின்  உயர்மட்ட குழுவில்  ஆராய்ந்து கொள்கை ரீதியாக மலையக மக்களின் நலன் கருதி  எடுக்கப்பட்ட முடிவுகளாகும்.  அரசாங்கங்களோடு இணைந்து செயல்படுவது அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமானையோ  அல்லது தொண்டமான் குடும்பத்தினரையோ  வசை பாடுவதை விடுத்து  இதன் மூலம் மலையக மக்களுக்கு கிடைத்த நன்மைகளை சீர்தூக்கி பார்த்து விட்டு எவராவது விமர்சனங்களை வைப்பார்களேயானால் இதற்கு முகம் கொடுக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தயாராக இருக்கிறது. எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

    Related

    Category: இலங்கை பிரதான செய்திகள்
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!
    இலங்கை

    கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

    2025-12-02
    இந்திய கடற்படையின் மகத்தான உதவி!
    ஆசிரியர் தெரிவு

    பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள நாடுகளின் பட்டியல்!

    2025-12-02
    எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்துக்கான ஒப்பந்தத்தை இரத்து செய்ய அனுமதி
    இலங்கை

    அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள்!

    2025-12-02
    வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய பாதிப்பு!
    இலங்கை

    வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய பாதிப்பு!

    2025-12-02
    யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்ட 729 எரிவாயு சிலிண்டர்கள்! 
    இலங்கை

    யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்ட 729 எரிவாயு சிலிண்டர்கள்! 

    2025-12-02
    நாளை மீண்டும் திறக்கப்படும் சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு!
    இலங்கை

    நாளை மீண்டும் திறக்கப்படும் சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு!

    2025-12-02
    Next Post
    ஸ்கொட்லாந்து  நாடாளுமன்றத்தில் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் –  சாணக்கியன்

    ஸ்கொட்லாந்து  நாடாளுமன்றத்தில் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – சாணக்கியன்

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.